"தளபதி விஜயின் லியோ பட 7AM சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்க இயலாது"- உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம்! விவரம் உள்ளே

லியோ சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி இல்லை தமிழ் நாடு அரசு விளக்கம்,tamilnadu govt statement on thalapathy vijay in leo movie 7am shows | Galatta

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தளபதி விஜயின் லியோ திரைப்படத்தின் சிறப்பு காட்சிகளுக்கான அனுமதி வழங்க இயலாது என தமிழ்நாடு அரசு காரணங்களோடு சென்னை உயர்நீதிமன்றத்திற்கு விளக்கம் அளித்து இருக்கிறது. இந்திய சினிமாவில் உச்ச நட்சத்திர நாயகர்களில் ஒருவராக திகழும் தளபதி விஜயின் லியோ திரைப்படம் நாளை அக்டோபர் 19ஆம் தேதி வியாழக்கிழமை ஆயுத பூஜை வெளியீடாக உலகம் எங்கும் மிகப் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகிறது மாஸ்டர் படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இணைந்து இருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தளபதி விஜய் கூட்டணியில் பக்கா அதிரடி ஆக்சன் திரைப்படமாக உருவாகியிருக்கும் இந்த லியோ திரைப்படம் ஆரம்ப முதலே மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் தற்போது டிக்கெட்டுகள் முன்பதிவில் ரசிகர்கள் அளவு கடந்த ஆர்வம் காட்டுவதால், ரிலீசுக்கு முன்பே வசூல் சாதனைகளை தொடங்கிய லியோ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் இன்னும் பெரிய சாதனைகளை படைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஒரு புறம் இருக்க தளபதி விஜயின் லியோ திரைப்படத்திற்கான அதிகாலை 4AM மற்றும் 7AM சிறப்பு காட்சிகளுக்கான அனுமதி கிடைக்காதது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. வழக்கமாகவே நட்சத்திர நாயகர்களின் திரைப்படங்களை ரசிகர்கள் பண்டிகைகளாக கொண்டாடி வரும் சூழலில், கடந்த ஜனவரி மாதத்தில் வெளிவந்த வாரிசு மற்றும் துணிவு ஆகிய திரைப்படங்களுக்கான அதிகாலை சிறப்பு காட்சிகளின் சமயத்தில் எதிர்பாராமல் நேர்ந்த ஒரு ரசிகரின் உயிரிழப்பு இந்த அதிகாலை கொண்டாட்டங்களுக்கு தற்காலிகமாக வைத்தது.  இதன் எதிரொலியாக சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ஜெயிலர் திரைப்படத்திற்கு அதிகாலை காட்சி அனுமதிக்கப்படவில்லை. காலை 9 மணியிலிருந்து தான் முதல் காட்சி ஆரம்பமானது. இருப்பினும் தமிழகத்தை தாண்டி பிற மாநிலங்களில் அதிகாலை சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டன. 

பண்டிகை மற்றும் விடுமுறை தினங்களுக்கு முன்பே வெளிவரும் திரைப்படத்திற்கான சிறப்பு காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு தரப்பில் இருந்து அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி காலை 9AM மணி முதல் முதல் காட்சி தொடங்கப்பட்டு கடைசி காட்சி அன்று இரவு 1.30AM மணி வரை திரையிடப்பட வேண்டும் என்றும் ஒரு நாளுக்கு 5 காட்சிகள் என்றும் உத்தரவு வெளியானது. இருப்பினும் லியோ திரைப்படத்திற்கான அதிகாலை காட்சிகளுக்காக படக்குழுவினர் இது குறித்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த விசாரணை நேற்று அக்டோபர் 17ஆம் தேதி காலை நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. அதில், லியோ திரைப்படத்திற்கான 4 மணி காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட முடியாது என்றும், 9 மணி காட்சிக்கு பதிலாக 7 மணி முதல் காட்சியை தொடங்க அனுமதி கோரி தமிழ்நாடு அரசிடம் மனு அளிக்க வேண்டும் என்றும் அதனை தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் தனது உத்தரவை பிறப்பித்துள்ளது. 

அதன்படி உடனடியாக படக்குழுவினர் தமிழ்நாடு அரசிடம் காலை 7 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி கோரி விண்ணப்பித்தனர். இந்த நிலையில் இது குறித்து உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்திருக்கும் தமிழ்நாடு அரசு, “லியோ திரைப்படத்திற்கு 7 மணி காட்சிக்கு அனுமதி வழங்க இயலாது என்றும், ஏற்கனவே 9 மணியில் இருந்து இரவு 1.30 மணி வரை தினசரி 5 காட்சிகளுக்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இதில் 9 மணி காட்சிகளுக்கான டிக்கெட் முன்பதிவுகள் நிறைவடைந்து இருக்கிறது” என்றும் குறிப்பிட்டு விளக்கம் அளித்துள்ளனர். எனவே ஏற்கனவே அறிவித்தபடி காலை 9 மணியிலிருந்து தான் தமிழ்நாட்டில் தளபதி விஜய்யின் லியோ படத்திற்கான காட்சிகள் தொடங்கும் என்பது உறுதியாகிவிட்டது.
 

'லியோ' படத்திற்கு 7 மணி காட்சிக்கு அனுமதி வழங்க இயலாது - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்.#Leo #MadrasHighCourt #ThalapathyVijay #LeoFDFS #Leobookings #LokeshKanagaraj #Galatta

— Galatta Media (@galattadotcom) October 18, 2023