“நான் அவ்வளவு பெரிய நடிகையும் இல்ல!”- தனுஷ் - நயன்தாராவின் யாரடி மோகினி பட ஷூட்டிங் நினைவுகள் பகிர்ந்த சரண்யா மோகன்!

யாரடி மோகினி பட ஷூட்டிங் நினைவுகள் பகிர்ந்த சரண்யா மோகன்,saranya mohan shared shooting experience of yaaradi nee mohini with nayanthara | Galatta

தளபதி விஜயின் காதலுக்கு மரியாதை திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் தமிழ் மற்றும் மலையாள சினிமாவின் மிக முக்கிய நடிகைகளில் ஒருவராக உயர்ந்தவர் நடிகை சரண்யா மோகன். குறிப்பாக யாரடி நீ மோகினி, ஜெயம் கொண்டான், வெண்ணிலா கபடி குழு, வேலாயுதம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்த நடிகை சரண்யா மோகன் கடந்த 2015 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலரை திருமணம் செய்து கொண்ட பிறகு எந்த திரைப்படத்திலும் இதுவரை நடிக்கவில்லை. தற்போது திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருந்தாலும் நடிகை சரண்யா மோகன் எப்போது கம் பேக் கொடுப்பார் என்று மலையாளம் மற்றும் தமிழ் சினிமா ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர்.
 
குழந்தை நட்சத்திரம், தங்கை கதாபாத்திரம், முக்கிய வேடங்கள் மற்றும் கதாநாயகி என பலவிதமான கேரக்டர்களில் நடித்து அசத்திய சரண்யா மோகனன் யாரடி நீ மோகினி திரைப்படத்தில் நடித்த கதாபாத்திரத்தை அவ்வளவு எளிதில் ரசிகர்கள் மறந்து விட முடியாது. பூஜா என்கிற அனந்த வல்லி எனும் கதாபாத்திரத்தில் வெகுளியாகவும் மிகவும் எதார்த்தமாகவும் நடிகை சரண்யா கையாண்ட விதம் அனைவரது பாராட்டுகளையும் பெற்றது. இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு சிறப்பு பேட்டி கொடுத்த நடிகை சரண்யா மோகன் தனது திரைப் பயணம் குறித்து நம்மோடு பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் தனுஷ் மற்றும் நயன்தாரா உடன் இணைந்து யாரடி நீ மோகினி திரைப்படத்தில் பணியாற்றியது குறித்தும் திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்தும் நடிகை நயன்தாராவின் உதவும் மனப்பான்மை மற்றும் சக நடிகர் மீது காட்டும் அன்பு குறித்தும் நடிகை சரண்யா மோகன் பகிர்ந்து கொண்டார். அப்படியாக நயன்தாரா அவர்கள் குறித்து பேசிய போது, 

“யாரடி நீ மோகினி திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது "வெண்மேகம் பெண்ணாக" அந்த பாடலின் படப்பிடிப்பு சமயத்தில் எனக்கு காய்ச்சல் வந்துவிட்டது. படப்பிடிப்பு நடக்கும் இடத்திலிருந்து அருகாமையில் எந்த மருத்துவமனையும் இல்லை. இருப்பினும் என் அப்பாவிடம் ஒரு கிட் இருக்கும் அதில் மருந்துகள் எல்லாம் இருக்கும் அதில் காய்ச்சலுக்கான மருந்து சாப்பிட்டு விட்டு இருந்தேன். அப்போது வந்து என்னை சந்தித்த நயன்தாரா என் உடல் நிலை எப்படி இருக்கிறது என எல்லாம் கேட்டு விட்டு அங்கிருந்து அசிஸ்டன்ட்களை அழைத்து, ஷாட் ரெடி என்றால் மட்டும் இவரை அழைத்து வாருங்கள் மற்ற நேரங்களில் இவர் ஓய்வெடுக்கட்டும் என என்னை மிகவும் பார்த்துக் கொண்டார். நான் அவரை சந்தித்து கொஞ்ச நாள் தான் ஆகிறது நான் அவ்வளவு பெரிய நடிகையும் கிடையாது. உடன் நடிக்கும் சக நடிகர் மீது இருக்கும் அந்த அன்பு இருக்கிறதல்லவா அது அன்று நான் பார்த்தேன்" என பதில் அளித்து இருக்கிறார். இன்னும் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்ட நடிகை சரண்யா மோகனின் அந்த முழு பேட்டி இதோ…