'இது போதும் இனி நாங்க பாத்துக்கிறோம்!'- நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பால் உற்சாகத்தில் ரக்ஷிதா... காரணம் என்ன? விவரம் இதோ!

குழந்தை தத்தெடுப்பது குறித்த நீதிமன்ற தீர்ப்பால் ரக்ஷிதா மகிழ்ச்சி,Rachitha mahalakshmi shares happiness over court judgement on baby | Galatta

சின்னத்திரை உலகின் முன்னணி நட்சத்திர நடிகையாக திகழும் நடிகை ரக்ஷிதா மகாலட்சுமி ஆரம்பத்தில் கன்னட சீரியலில் தான் நடிகையாக அறிமுகமானார். இதனை அடுத்து 2011 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம்  சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்த ரக்ஷிதா மகாலட்சுமி தொடர்ந்து சன் டிவியில் இளவரசி சீரியலில் நடித்தார். பின்னர் விஜய் டிவியின் ஃபேவரிட் சீரியல்களில் ஒன்றான சரவணன் மீனாட்சி சீசன் 2 சீரியலில் மீனாட்சியாக களம் இறங்கிய நடிகை ரக்ஷிதா ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்தார். தொடர்ந்து சரவணன் மீனாட்சி சீசன் 3, நாச்சியார்புரம், நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2, இது சொல்ல மறந்த கதை, புதுப்புது அர்த்தங்கள், சத்தியா சீசன் 2, உள்ளிட்ட பல சீரியல்களிலும் நடித்துள்ளார்.மேலும் விஜய் தொலைக்காட்சியின் ஃபேவரட் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சிகள் போட்டியிட்ட நடிகை ரக்ஷிதா சிறப்பாக விளையாடி 91 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் தாக்குப்பிடித்து விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சின்னத்திரையில் மட்டுமல்லாது வெள்ளித்திரையிலும் காலடி பதித்த நடிகை ரக்ஷிதா மகாலட்சுமி கடந்த 2012 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளிவந்த பாரிஜாதா படத்தில் நடித்தார். தொடர்ந்து தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் வெளிவந்த உப்பு கருவாடு திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த வரிசையில் அடுத்ததாக மெய் நிகரே எனும் புதிய தமிழ் திரைப்படத்தில் நடிகை ரக்ஷிதா மகாலட்சுமி கதாநாயகியாக நடிக்கிறார். மெய் நிகரே திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக தற்போது ரக்ஷிதா இலங்கை சென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. முன்னதாக தான் நடித்த பிரிவோம் சந்திப்போம் சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகர் தினேஷை கடந்த 2013ல் ரக்ஷிதா திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். 

பிக் பாஸ் வீட்டில் ரக்ஷிதா மகாலட்சுமி இருந்தபோது அவரது கணவர் தினேஷ் தன்னுடைய முழு ஆதரவையும் ரக்ஷிதாவிற்கு கொடுத்தார். மேலும் இவர்களுக்கு இடையிலான கருத்து வேறுபாட்டிற்கும் தன் மீது இருக்கும் தவறுதான் காரணம் என்றும் தெரிவித்தார். இதனை அடுத்து பிக் பாஸ் வீட்டை விட்டு ரக்ஷிதா வெளியேறிய பிறகு கணவரோடு சேர்ந்து வாழ வாய்ப்பு இருப்பதாக பரவலாக பேசப்பட்டாலும், இருவரும் தற்போது வரை பிரிந்து தான் வாழ்ந்து வருகின்றனர். அதேபோல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடைபெற்ற ஒரு கடிதம் எழுதும் டாஸ்கில் இனி தனக்கு குழந்தை பிறக்குமா என்பது கூட தெரியாது அதனால் தன்னுடைய அம்மா தான் தன்னுடைய குழந்தை என்பது போல ரக்ஷிதா மகாலட்சுமி மிகவும் எமோஷனலாக தெரிவித்து இருந்தார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரன்னர் அப்-ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட விக்ரமனுடன் பிக் பாஸ் வீட்டில் இருந்த போது பேசிய ரக்ஷிதா மகாலட்சுமி விரைவில் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க இருப்பது குறித்து தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில் மும்பை நீதிமன்றம் தற்போது வழங்கி இருக்கும் ஒரு புதிய தீர்ப்பால் ரக்ஷிதா மகாலட்சுமி மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார். அந்த தீர்ப்பின்படி தனியாக வாழும் பெண்களும் வேலைக்குச் செல்லும் பெண்களும் குழந்தையை தத்தெடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டேட்டஸில் பகிர்ந்துள்ள நடிகை ரக்ஷிதா "இது போதும் இனிமேல் நாங்களே பார்த்துக் கொள்கிறோம்" என்று பதிவு செய்துள்ளார். முன்னதாக பெண் குழந்தையை வளர்க்கவே விரும்புவதாக ரக்ஷிதா தெரிவித்திருந்த நிலையில், விரைவில் ஒரு பெண் குழந்தையை அவர் தத்தெடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ரக்ஷிதாவின் அந்த பதிவு இதோ…
vignesh shivan about movie reviews and reviewers

அந்த இசையின் சத்தங்கள் நம்ப முடியாதவை!- ரோஜா படத்திற்கு முன் ARரஹ்மான் உடனான முதல் சந்திப்பு குறித்து பேசிய மணிரத்னம்! வைரல் வீடியோ
சினிமா

அந்த இசையின் சத்தங்கள் நம்ப முடியாதவை!- ரோஜா படத்திற்கு முன் ARரஹ்மான் உடனான முதல் சந்திப்பு குறித்து பேசிய மணிரத்னம்! வைரல் வீடியோ

'கஷ்டமா இருக்கு ஆனா... கொஞ்சம் PERSONAL காரணம்!'- பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகும் கோபி! வைரலாகும் வீடியோ
சினிமா

'கஷ்டமா இருக்கு ஆனா... கொஞ்சம் PERSONAL காரணம்!'- பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகும் கோபி! வைரலாகும் வீடியோ

பொன்னியின் செல்வன் 2 பட புது சர்ப்ரைஸ்... ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த அக நக பாடலின் ரொமான்டிக்கான வீடியோ இதோ!
சினிமா

பொன்னியின் செல்வன் 2 பட புது சர்ப்ரைஸ்... ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த அக நக பாடலின் ரொமான்டிக்கான வீடியோ இதோ!