‘பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்!’- திரிஷா & நடிகைகள் குறித்து அவதூறாக பேசிய மன்சூர் அலிகானுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம்!

திரிஷா பற்றி மன்சூர் அலிகானின் பேச்சுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம்,Nadigar sangam condemns mansoor ali khan and demands apology | Galatta

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான லியோ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகர் மன்சூர் அலிகான், சமீபத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஒன்றை பேசிய போது நடிகை திரிஷா குறித்தும் கதாநாயகிகள் குறித்தும் மிகவும் அவதூறாக பேசியது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய மன்சூர் அலிகான் பேசிய வீடியோவை பார்த்த த்ரிஷா உடனடியாக தனது வன்மையான கண்டனத்தை வெளிப்படுத்தினார். 

அது குறித்த பதிவில், “சமீபத்தில் நடிகர் மன்சூர் அலிகான் என்னைப் பற்றி அருவருக்கத்தக்க வகையில் பேசிய வீடியோவைப் பார்த்தேன். அவரது பேச்சை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.. அந்த பேச்சு ஆணாதிக்க மனநிலையிலும், மரியாதைக் குறைவானதாகவும், பாலின பாகுபாட்டைப் பிரதிபலிக்கக் கூடிய மோசமான ஒன்றாகவும் இருந்தது. என்னுடன் நடிக்க வேண்டும் என அவர் தொடர்ந்து ஆசைப்படட்டும். ஆனால், இத்தகைய கேவலமான மனிதருடன் இணைந்து நடிக்காததை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். என்னுடைய வாழ்நாளில் அவருடன் இணைந்து நடிக்க மாட்டேன் என்பது உறுதி. அவரைப் போன்றவர்களால் ஒட்டுமொத்த மனித சமூகத்துக்கே இழுக்கு!”  என தெரிவித்தார். இந்த நிலையில் இந்த அவதூறு பேச்சுக்கு மன்சூர் அலிகான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என தென்னிந்திய நடிகர் சங்கம் தற்போது அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிக்கையில், 

"மூத்த நடிகர் திரு.மன்சூர் அலிகான் நடிகைகள் பற்றி ஒரு பேட்டியில் பேசிய வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தோம். திரைத்துறையில் பெண்கள் நுழைவதும் சாதிப்பதும் இன்னமும் சவாலாகவே இருக்கும் இன்றைய சூழலில், பல்வேறு சவால்களை எதிர்கொண்டு சாதித்து வரும் நடிகைகளை பற்றி இப்படி மோசமான கருத்துகளைத் தெரிவித்தது என்பது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. தென்னிந்திய நடிகர் சங்கம் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட நடிகைகள் உடன் நிற்கும். தென்னிந்திய நடிகர் சங்கம் சக நடிகர்களைப் பற்றி நகைச்சுவை என்ற பெயரில் தரக்குறைவாக பேசிய திரு. மன்சூர் அலிகான் அவர்களை வன்மையாகக் கண்டிக்கிறது. அதிர்ச்சியுறும் அவரது இப்போக்கு கவலையையும், கோபத்தையும் உண்டாக்குகிறது. ஒரு நடிகராக, இயக்குனராக, தயாரிப்பாளராக பொறுப்புணர்ந்து பேச அவர் கற்றுக்கொள்ள வேண்டும். மக்களால் கவனிக்கப்படும் பிரபலங்களாக இருக்கும்போது, உதிர்க்கும் கருத்துகளும், வார்த்தைகளும் கண்ணியமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படை உணர்வின்றி அவர் பேசியது மிகவும் தவறாகும். எந்த ஊடகம் முன்பு அவர் பேசினாரோ அந்த ஊடகம் முன்பு உண்மை மனதுடன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டுகிறோம். தான் இக்கீழ்செயல் காரணமாய்த் தன் தவறு உணர்ந்து, மனம் வருந்தி, உண்மையாக பொது மன்னிப்பு கூறும் வரை அவரை சங்கத்திலிருந்து ஏன் தற்காலிகமாக நீக்கம் செய்யக்கூடாது என்று தென்னிந்திய நடிகர் சங்கம் கருதுகிறது. இந்நிகழ்வினை உதாரணித்து, வரும் காலங்களில் மற்ற நடிகர்களும் பொதுவெளியில் கருத்துகள் பகிரும்போது கவனமாய் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம். இந்த தனி நபர் விமர்சனம் மட்டும் அல்லாது. வெகு நாட்களாக பொது ஊடகங்களில் மறைமுகமாகவும் நேரடியாகவும் பல பொய்க் கதைகளையும் திருத்த நிகழ்வுகளையும் பொழுதுபோக்கு என்ற பெயரில் பரப்பி பரபரப்பை உண்டாக்கிக் இதில் சோகமும் கோபமும், இத்துறை அவற்றைத் தொகுத்து வழங்குவதுதான். கொள்கின்றனர். சார்ந்தவர்களே மென்மையுள்ளம் படைத்தவர்கள் என்பதனால் ஒவ்வொரு முறையும் நடிக சமுதாயத்தினர் இலக்காக்கப்படுவது இனியும் நிகழாது. தீவிரமான எதிர்வினைகள் சாத்வீகமான முறையில் தொடுக்கப்படும் என்பதையும் தென்னிந்திய நடிகர் சங்கம் இந்த சூழலில் தெரிவித்துக் கொள்கிறது.”

என குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கை இதோ…
 

நடிகைகளை பற்றி அவதூறு பேச்சு.. மூத்த நடிகர் மன்சூர் அலிகான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்!
தென்னிந்திய நடிகர் சங்கம் வன்மையாக கண்டிப்பு!! #NadigarSangam #siaa@actornasser @VishalKOfficial @Karthi_Offl #poochiSmurugan #karunas @johnsoncinepro pic.twitter.com/MGoUnYqXoU

— Johnson PRO (@johnsoncinepro) November 19, 2023