"விஜய் சாருக்கு கதை சொல்லியிருக்கிறேன்!"- தளபதி ‘FANBOY MOMENT’ பகிர்ந்த மாரி செல்வராஜ்! ட்ரெண்டிங் வீடியோ

தளபதி விஜய் குறித்து மாரி செல்வராஜ் பேசிய வீடியோ,Mari selvaraj shared a fanboy moment of thalapathy vijay in madhura movie | Galatta

இயக்குனர் மாரி செல்வராஜின் மூன்றாவது படமான மாமன்னன் திரைப்படம் இன்று ஜூன் 29ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகியிருக்கிறது. இதுவரை பார்த்திராத முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் வைகைப்புயல் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின் , ஃபகத் ஃபாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இணைந்திருக்கும் மாமன்னன் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருக்கிறார். இயக்குனர் மாரி செல்வராஜ், தளபதி விஜயின் தீவிர ரசிகர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அடங்காத் தமிழன் விஜய் ரசிகர் மன்றத்தின் தலைவராக இருந்தவர் இயக்குனர் மாரி செல்வராஜ். இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலில் நடைபெற்ற இயக்குனர் மாரி செல்வராஜ் ரசிகர்கள் கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொண்ட மாரி செல்வராஜ் அவர்களிடம்,

“தளபதி விஜய் படங்களை பார்க்கிறீர்களா அதற்காக நேரம் இருக்கிறதா?” என கேட்டபோது, “அதெல்லாம் அந்த நேரம் மட்டும் ஃபேன் பாயாக மாறி விடுவேன். அவர்களின் டிக்கெட் புக் செய்து கூட்டி செல்வார்கள். இப்போது தான் முதல் நாள் பார்ப்பது கொஞ்சம் கம்மியாகிவிட்டது. கடைசியாக முதல் நாள் பார்த்த படம் என்றால் மதுர படம். மதுர ரிலீஸ்.. நான் சட்டக் கல்லூரியில் நுழைவுத் தேர்வு எழுதி திருநெல்வேலிக்கு காலை தாமதமாக 11 மணிக்கு இறங்கி, பஸ்ஸில் ஏறி வேகமாக போகிறேன். அப்போது ராம் தியேட்டர் தான் இப்போது திருநெல்வேலியில் அந்த தியேட்டர் பெரிய தியேட்டர். அந்த ராம் தியேட்டருக்கு முன்பு கேபிளுக்காக பெரிய குழி தோண்டி போட்டிருந்தார்கள். படம் போட்டு விட்டார்கள் தியேட்டருக்கு வெளியில் ஆட்களே இல்லை. அது பஸ் நிறுத்தும் இடமும் கிடையாது பஸ் தள்ளி தான் நிறுத்துவார்கள் நான் பஸ்ஸில் போக போக அப்படியே குதித்து விட்டு நேராக குழியில் விழுந்து விட்டேன். நிமிர்ந்து பார்த்தால் என் உயரத்திற்கு இருக்கிறது அந்த குழி. பின்னர் கஷ்டப்பட்டு அங்கிருந்து ஏறி உள்ளே போய் தியேட்டரில் படம் பார்த்து கொண்டாடி வெளியில் வந்ததெல்லாம் ஒரு கதை. உள்ளே போனால் மெட்ராஸில் இருந்து தானடா வந்தாய் என்ன மண்ணுல இருந்து வந்த மாதிரி இருக்கிறாய் சட்டக் கல்லூரி தேர்வு எழுத தானே சென்றாய் இப்படி வந்திருக்கிறாய் என கேட்கிறார்கள். தியேட்டரில் இருப்பவர்களே பயந்து விட்டார்கள். இதை விஜய் சாரிடமும் சொன்னேன். ஒரு நாள் இருவரும் சந்தித்து பேசிக் கொண்டிருந்தோம். விஜய் சாரை சந்தித்ததே ஒரு தனி சந்தோஷமாக இருந்தது. அவரிடம் நிறைய கதைகள் எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தேன். அப்படியே ஆச்சரியமாக கேட்டுக் கொண்டிருந்தார். இவ்வளவு பண்ணி இருக்கிறீர்களா என்ன சொன்னார். அந்த ஃபேன் பாய் மொமெண்ட் போகவில்லை. இன்னும் சொல்லப்போனால் நான் அவரிடம் கதையெல்லாம் சொல்லி இருக்கிறேன். திரையில் பார்க்கும்போது நான் ஒரு ஃபேன் பாயாக இருந்தேன் பேசும்போது இயக்குனராகிவிட்டேன். அவரை உற்சாகப்படுத்த நினைத்தால் என்னால் முடியும். ஆனால் எனக்கு என்னவாக வேண்டுமோ அந்த கதையை மட்டும் சொன்னேன். அவர் “என்ன சார்” என்றார். பண்ணுவோம் கண்டிப்பா பண்ணுவோம்” என தெரிவித்து இருக்கிறார். இன்னும் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்ட இயக்குனர் மாரி செல்வராஜின் அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

பண்டிகை தினத்தில் வெளியாகும் ராகவா லாரனஸின் சந்திரமுகி 2... ரசிகர்கள் எதிர்பார்த்த ரிலீஸ் தேதி அறிவிப்பு இதோ!
சினிமா

பண்டிகை தினத்தில் வெளியாகும் ராகவா லாரனஸின் சந்திரமுகி 2... ரசிகர்கள் எதிர்பார்த்த ரிலீஸ் தேதி அறிவிப்பு இதோ!

கோலாகலமாக நடந்த ஒளிப்பதிவாளர் ரவி.K.சந்திரன் இல்லத் திருமணம்... நேரில் வாழ்த்திய நட்சத்திரங்களின் புகைப்படங்கள் இதோ!
சினிமா

கோலாகலமாக நடந்த ஒளிப்பதிவாளர் ரவி.K.சந்திரன் இல்லத் திருமணம்... நேரில் வாழ்த்திய நட்சத்திரங்களின் புகைப்படங்கள் இதோ!

'வாழை படத்தில் ஹீரோ பெயர் இதுதான்!'- உணர்ச்சிவசப்பட்ட மாமன்னன் இயக்குனர் மாரி செல்வராஜ் கொடுத்த ருசிகர தகவல்! வீடியோ உள்ளே
சினிமா

'வாழை படத்தில் ஹீரோ பெயர் இதுதான்!'- உணர்ச்சிவசப்பட்ட மாமன்னன் இயக்குனர் மாரி செல்வராஜ் கொடுத்த ருசிகர தகவல்! வீடியோ உள்ளே