'கூட்டின் முகவரியை தொலைத்த பறவை நான்!'- முதல் முறை தன் குடும்பத்தினர் பற்றி உருக்கமாக பேசிய மாறி செல்வராஜ்! சிறப்பு பேட்டி

தன் குடும்பத்தினர் பற்றி உருக்கமாக பேசிய மாறி செல்வராஜ்,mari selvaraj opens about his family in galatta fans festival | Galatta

எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வைகை புயல் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், ஃபகத் ஃபாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ள மாமன்னன் திரைப்படம் இன்று ஜூன் 29ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மாமன்னன் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்தியேக பேட்டி அளித்த இயக்குனர் மாரி செல்வராஜ் நம்மோடு பல உருக்கமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் தனது குடும்பத்தினர் குறித்து முதல் முறையாக மனம் திறந்து பேசிய போது,

“வாழ்க்கை நம்மை நிறைய பக்கங்களுக்கு திருப்பும், நிறைய பக்கங்களுக்கு அனுப்பும்.. நாம் நிறைய முகங்களை சந்திப்போம்.. பின்னாளில் அதையெல்லாம் சரி செய்வதற்கு எப்போது நேரம் கிடைக்கும் என நினைக்கும் போது நாம் ஓட ஆரம்பித்து இருப்போம்.” என பேசிய மாரி செல்வராஜ், தொடர்ந்து பேசிய போது, “என் குடும்பத்திற்கு நான் தான் நிறைய பிழைகள் செய்திருக்கிறேன். உன் குடும்பம் எப்போதுமே என்னை சரிப்படுத்த தான் முயற்சி செய்தது. நான் அப்போதே சிறுவயதில் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும், எல்லாவற்றையும் உடைக்க வேண்டும், எல்லாவற்றையும் ரசிக்க வேண்டும், எல்லாவற்றையும் செய்து பார்க்க வேண்டும், எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள வேண்டும். ஏதோ ஒன்று எங்கேயோ இருக்கிறது என திரிந்து கொண்டிருந்தேன். குடும்பத்தினுடைய ஒரு தேவையை குடும்பத்தினுடைய ஒரு வறுமையையோ புரிந்து கொள்ளாத ஒரு பையனாக அலைந்து கொண்டிருந்தேன். என் குடும்பம் என்னை பல இடங்களில் கட்டுப்படுத்த முயற்சி செய்தது ஒரு கட்டத்தில் இல்லை அவனை விட்டு விடுவோம் என விட்டதால் நான் இப்போது இந்த இடத்தில் இருக்கிறேன். யோசித்துப் பார்த்தால் எனக்காக என் குடும்பம் நிறைய தியாகங்கள் செய்திருக்கிறது. நிறைய பொறுத்து இருக்கிறார்கள். நான் இப்போது இந்த மாதிரி படங்கள் பண்ணும் போதும் கூட என் குடும்பம் என்னை கேள்வி கேட்டது கிடையாது. அவர்கள் என்னை முழுமையாக நம்புகிறார்கள் நான் ஜெயித்து விட்டதாக எப்படி நம்புகிறேன் என்றால் என் குடும்பம் நான் என்ன சொன்னாலும் அது சரி என நம்புகிறார்கள். முன்னால் எப்படி தெரியுமா இருந்தது “அவன் தப்பு தான் செய்திருப்பான்” என இருந்தது. நான் போவதற்கு முன்னால் என் தப்பு வீட்டுக்கு போய்விடும். இன்று யார் என்ன சொன்னாலும் “அவன் சரியாகத்தான் இருப்பான்” என சொல்லுகிறார்கள். எனக்கு என்னமோ நான் எல்லை கடந்து விட்டேன் என்று தெரிகிறது. அவர்கள் எல்லாருமே இயல்பாக தான் இருக்கிறார்கள். எல்லோருமே என் மீது ஆசையாக தான் இருக்கிறார்கள் நான் திரும்ப வேண்டும். நான் கூட்டின் முகவரியை தொலைத்த ஒரு பறவை மாதிரி ஆகி விட்டேனோ என தோன்றுகிறது. எனக்கு மீண்டும் திரும்பி சென்று எல்லோருடனும் வாழ வேண்டும் என்றெல்லாம் ஆசை இருக்கிறது.” என்றார். இயக்குனர் மாரி செல்வராஜ் அந்த முழு பேட்டி பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

கோலாகலமாக நடந்த ஒளிப்பதிவாளர் ரவி.K.சந்திரன் இல்லத் திருமணம்... நேரில் வாழ்த்திய நட்சத்திரங்களின் புகைப்படங்கள் இதோ!
சினிமா

கோலாகலமாக நடந்த ஒளிப்பதிவாளர் ரவி.K.சந்திரன் இல்லத் திருமணம்... நேரில் வாழ்த்திய நட்சத்திரங்களின் புகைப்படங்கள் இதோ!

'வாழை படத்தில் ஹீரோ பெயர் இதுதான்!'- உணர்ச்சிவசப்பட்ட மாமன்னன் இயக்குனர் மாரி செல்வராஜ் கொடுத்த ருசிகர தகவல்! வீடியோ உள்ளே
சினிமா

'வாழை படத்தில் ஹீரோ பெயர் இதுதான்!'- உணர்ச்சிவசப்பட்ட மாமன்னன் இயக்குனர் மாரி செல்வராஜ் கொடுத்த ருசிகர தகவல்! வீடியோ உள்ளே

சினிமா

"14 வருட பிரிவு இது... என்னை வளர்த்ததே அவர் தான்"- பிரிந்த தனது அண்ணனின் பேச்சால் கண் கலங்கிய மாரி செல்வராஜ்! எமோஷனலான வீடியோ