மாஸ்டர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு மீண்டும் தளபதி விஜய் - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் லியோ திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியிடாக உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் SS.லலித் குமார் மற்றும் ஜெகதீசன் பழனிசாமி இணைந்து தயாரிக்க பக்க ஆக்ஷன் திரில்லர் படமாக தயாராகி இருக்கும் லியோ திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு லியோ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் தற்போது இறுதி கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இதனிடையே இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இன்று ஜூலை 19ஆம் தேதி கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு மாணவர்களோடு உரையாடினார். அப்போது தளபதி விஜயின் “லியோ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளிவர இன்னும் கொஞ்சம் தாமதமாகும் என்றும் இது முதல் பாடல் இரண்டாவது பாடல் என தொடர்ந்து பாடல்கள் வெளியிடும் வகையிலான படம் கிடையாது கைதி மாதிரியான ஒரு படம்” என தெரிவித்திருக்கிறார். விழா முடிந்து நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்தியேகமாக பேட்டி கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் நம்மோடு பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில், தொடர்ச்சியாக நீங்கள் சந்தித்து வரும் ஒரு கேள்வி என்றால் அது "லியோ அப்டேட்" தான். பசங்க எல்லோரும் கும்பலாக எடுத்த உடனே அப்படி கத்தி கேட்கிறார்கள். கேட்கும் எங்களுக்கு எவ்வளவு உற்சாகமாக இருக்கிறதோ அதை சொல்லும் உங்களுக்கும் அந்த உற்சாகம் கண்டிப்பாக இருக்கும்.. அதை கட்டுப்படுத்திக் கொள்வது எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது? என கேட்டபோது,
“இது எல்லா படங்களுக்குமே நடக்கும். நாம் வேலை செய்வதை அதற்காக தானே.. படத்தை எப்போது கொண்டு வந்து ரசிகர்களுக்கு கொடுப்போம் என இருக்கும் போது அந்த உற்சாகம் எப்போதுமே இருக்கும் அது குறையாது. லியோ திரைப்படம் எனக்கு மிகவும் ஸ்பெஷலானது என நினைக்கிறேன். நான் அப்படி பண்ண வேண்டும் என முயற்சித்தது இல்லை. இதில் தான் நான் கொஞ்சம் எக்ஸ்பிரிமெண்டலாக ஒன்று செய்யலாம் என முயற்சி செய்த படம். இதில் விஜய் அண்ணா போட்ட உழைப்பை சொல்ல வார்த்தைகளே இல்லை. எனவே இதை எல்லாம் நான் ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதில் எனக்கும் பெரிய ஆர்வம் இருக்கிறது. அதற்கான நேரம் எடுக்கும் அல்லவா இப்போது தான் படப்பிடிப்பு முடிந்து இருக்கிறது. அடுத்த மூன்று மாதங்கள் போஸ்ட் புரொடக்ஷன் நடைபெற இருக்கிறது. நாங்கள் முன்பே திட்டமிட்டு இருந்தோம். போஸ்ட் புரொடக்ஷனுக்கு இந்த படத்திற்கு நிறைய நேரம் வேண்டும் என்று. அதனால்தான் இந்த ஜூன் மாத்தில் படத்தைமுடித்ததும்.. அடுத்த மூன்று மாதங்கள் போஸ்ட் புரொடக்ஷன் இருக்கும். நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்." என தெரிவித்துள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜின் அந்த லியோ ஸ்பெஷல் பேட்டி இதோ...