கன்னட மற்றும் தெலுங்கில் பிரபல சீரியல் நடிகையாக கலக்கி வருபவர் ஐஸ்வர்யா.மாடல் மற்றும் மேடை நாடக கலைஞராக தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் ஐஸ்வர்யா.கன்னடத்தில் ஒளிபரப்பான தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து சின்னத்திரையில் தனது என்ட்ரியை கொடுத்தார் ஐஸ்வர்யா.

அடுத்து சில சீரியல்களில் முக்கிய வேடத்தில் நடித்த இவர்.கிருஷ்ணா துளசி என்ற தெலுங்கு சீரியலில் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக மாறினார்.இந்த தொடரில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்றார் ஐஸ்வர்யா.

இதே தொடர் கன்னடத்திலும் அதே பெயரில் ஒளிபரப்பாகி பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.இந்த தொடரிலும் ஐஸ்வர்யா ஹீரோயினாக நடித்து அசத்திவருகிறார்.இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார்.

தற்போது தனக்கு ரோஹித் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்துள்ளது என்று சில புகைப்படங்களோடு ரசிகர்களிடம் இந்த நற்செய்தியை அவர் பகிர்ந்துள்ளார்.இவருக்கு ரசிகர்களும் பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.