ஐஸ்வர்யா மேனனின் போஸ்ட் லாக்டவுன் பிளான் !
By Sakthi Priyan | Galatta | May 22, 2020 19:05 PM IST
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் கதாநாயகிகளுள் ஒருவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். மிர்ச்சி சிவா நடித்த தமிழ்ப்படம்-2 படத்தின் மூலம் பிரபலமாகிய இவருக்கு ஹிப்ஹாப் ஆதியின் நான் சிரித்தால் திரைப்படம் மிகப்பெரிய மைல்கல்லாக அமைந்தது. இதனைத்தொடர்ந்து பல திரைப்படங்களில் கமிட்டாகி வருகிறார் ஐஸ்வர்யா. இந்த லாக்டவுனில் ஐஸ்வர்யாவின் பதிவுகள் அனைத்தும் வைரலாகி வருகிறது.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் அனைவரும் அவர்களது வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ளனர். திரைப்பிரபலங்கள் சோஷியல் மீடியாவான முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் ஆக்டிவாக இயங்கி வருகின்றனர்.
இந்நிலையில் ஐஸ்வர்யா மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் லாக்டவுன் முடிந்த பிறகு நான் செய்யும் முக்கியமான வேலைகள் இதுவே. வெளியில் சென்று நன்றாக காற்று வாங்கி, பயணங்கள் மேற்கொண்டு, வெளி உலகத்தை காண போகிறேன். முதலில் என் வீட்டை வெளியே வர வேண்டும் என பதிவு செய்துள்ளார்.