"இவரை என் படத்தில் நடிக்க வைக்க வேண்டும்!"- இயக்குனர் நெல்சன் இயக்க விரும்பும் அந்த நடிகர் யார் தெரியுமா? வீடியோ இதோ

இயக்குனர் நெல்சன் விஜய் சேதுபதி இயக்க விரும்புகிறார்,director nelson wants to cast vijay sethupathi for his movie | Galatta

கிட்டத்தட்ட 48 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களின் மனம் கவர்ந்த உச்ச நட்சத்திரமாக என்றென்றும் இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழும் ரஜினிகாந்த் அவர்கள் நடிப்பில் தற்போது வெளிவந்திருக்கும் திரைப்படம் ஜெயிலர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த தர்பார் மற்றும் அண்ணாத்த ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பெரிய அளவில் பூர்த்தி செய்யாத நிலையில் ஜெயிலர் திரைப்படம் அவை அனைத்தையும் ஜெயிலர் பூர்த்தி செய்துள்ளதாக ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். அதேபோல் கடைசியாக இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வெளிவந்த பீஸ்ட் திரைப்படமும் சில எதிர்மறை விமர்சனங்களை சந்தித்த நிலையில் ஜெயிலர் படத்தின் இந்த வெற்றி இயக்குனர் நெல்சனுக்கு ஒரு நல்ல கம் பேக் என்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

முதல் முறையாக இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, மிர்னா மேனன், யோகி பாபு, விநாயகன், ரெடன் கிங்ஸ்லி, ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி செராஃப், தமன்னா ஆகியோர் மிக முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக ஜெயிலர் திரைப்படத்தை தயாரித்திருக்கிறது. விக்னேஷ் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில் நிர்மல்.K படத்தொகுப்பு செய்திருக்கும் ஜெயிலர் திரைப்படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசை அமைத்திருக்கிறார். இதுவரை எந்த தமிழ் படமும் எட்டாத மிகப் பெரிய வசூல் சாதனையாக வெறும் நான்கே நாட்களில் வெளிநாடுகளில் மட்டும் மொத்தமாக 105 கோடிக்கு மேல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் ஜெயிலர் திரைப்படம் வசூலித்திருப்பதாக தற்போது வெளிநாடுகளில் ஜெயிலர் திரைப்படத்தை வெளியிட்டு இருக்கும் ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. 

இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்தியேக பேட்டி கொடுத்த இயக்குனர் நெல்சன் அவர்கள் நம்மோடு பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் பேசும் போது, "இந்த ஒரு நடிகர் எப்படியாவது உங்களது படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என நீங்கள் விரும்புவது யார்? என கேட்டபோது, "விஜய் சேதுபதி" என உடனடியாக பதில் அளித்தார். தொடர்ந்து பேசும் போது, "எனக்கு அவரது திரைப்படங்கள் ரொம்ப பிடிக்கும் ஆனால், எனக்கு ஒரு சரியான கதாபாத்திரம் அல்லது ஒரு கதை அவருக்கு என்று அமையவில்லை. ஆனால் அவருடைய நடிப்பை மிகவும் ரசித்திருக்கிறேன். நிறைய படங்களில் மிகவும் ப்ரிள்ளியண்டாக இருக்கும். அதை பார்க்கும் போதெல்லாம்...  கடைசி விவசாயி வரைக்கும் நான் பார்த்திருக்கிறேன் அட்டகாசமாக இருக்கிறார்." என தெரிவித்தார். தொடர்ந்து அவரிடம், "அவருடைய நகைச்சுவை ZONEகளில் பெரிதாக யாரும் பயன்படுத்தவில்லையோ?" என கேட்டபோது, "இல்லை நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும் எல்லாம் பண்ணார். ஆனால் அவர் எல்லாமே வேறு வேறாக மாற்றி மாற்றி பண்ணுகிறார். அவர் எல்லாமே நன்றாக தான் பண்ணுகிறார்." என பதில் அளித்திருக்கிறார். இன்னும் பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்ட இயக்குனர் நெல்சன் அவர்களின் அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.