"பொன்னியின் செல்வன் போல் வேள்பாரி நாவலையும் இயக்குவீர்களா?" என்ற கேள்விக்கு அட்டகாசமான அப்டேட் கொடுத்த மணிரத்னம் – வைரலாகும் வீடியோ இதோ..

வேள்பாரி நாவல் படமாவது குறித்து மணிரத்தினம் பகிர்ந்த தகவல் - Director Maniratnam about Su venkatesan Velpari novel | Galatta

வரும் ஏப்ரல் 28 ம் தேதி ஒட்டு மொத்த திரையுலகமே எதிர்பார்ப்பில் இருக்கும் முக்கியமான தமிழ் திரைப்படம் போன்னியின் செல்வன் இரண்டாம் பாகம். முதல் பாகத்தில் மிகப்பெரிய வெற்றிக்கு பின் வெளியாகவிருக்கும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் தனி எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தமிழ் இலக்கியங்களில் மிக முக்கியமான நாவலாகவும் வாசகர்கள் அதிகம் படித்த நூலாகவும் இருந்த கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி உ=இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய இப்படத்திற்கு உலகம் முழுவதும் தனி எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்திற்கான இறுதிகட்ட விளம்பர வேலையில் படக்குழு இறங்கியுள்ளது.

அதில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பொன்னியின் செல்வன் படக்குழுவினர் படம் குறித்து பல தகவல்களை பகிர்ந்து கொண்டனர். இந்த அமர்வில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, கார்த்தி, சோபிதா மற்றும் இயக்குனர் மணிரத்னம் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது பொன்னியின் செல்வன் இயக்குனரிடம் மணிரத்னத்திடம் வேள்பாரி புத்தகத்தை படமாக எடுப்பீர்களா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.

அதற்கு அவர்,”நண்பர் ஒருவர் அதை எடுக்க போகிறார். நீங்க காத்திருந்து பாருங்க..நானும் பார்க்க போகிறேன்” என்றார். மேலும் தொடர்ந்து மணி ரத்னம் அவர்கள், “அதை நான் நம்புகிறேன். இது ஒரு தொடக்கமாக இருக்கும். தமிழ் இலக்கியங்களில் தமிழ் வரலாற்றில் நிறைய வாய்ப்புகள் உள்ளது. வரும் இயக்குனர்கள் அதை கையிலெடுத்து செய்வார்கள் என்று நான் நம்புகிறேன்" என்றார். அதை தொடர்ந்து நடிகர் சியான் விக்ரம் “இயக்குனர் ஷங்கர் சார் அதை எடுக்க போகிறார்." என்று கூறினார்.வேள்பாரி நாவல் குறித்து வெளியான இந்த அப்டேட் ரசிகர்களை மேலும் உற்சாகமடையை செய்து இந்த தகவலை அதிகளவு பகிர்ந்து வருகின்றனர்.

வார இதழிலில் புனைவு கதையாக வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று கவனம் பெற்ற வரலாற்று புனைவு கதை வேள்பாரி. இதை மக்களவை உறுப்பினரும், எழுத்தாளருமான சு.வெங்கடேசன் எழுதி இருந்தார். இக்கதையினை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் அவர்கள் படமாக இருப்பதாகவும் அதில் நடிகர் சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதகாவும் தகவல் வெளியானது. மேலும் வேல்பாரியை எழுதிய சு வெங்கடேசன் அவர்களும் இப்படத்தில் இணைந்து பணியாற்றவுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது. என்பது குறிப்பிடத்தக்கது. 

 

“காசு இல்லாம சொந்த வீட்டை வித்தோம்..” உண்மையை உடைக்கும் ராகவா லாரன்ஸ் – சுவாரஸ்யமான தகவல்கள் கொண்ட முழு வீடியோ இதோ..
சினிமா

“காசு இல்லாம சொந்த வீட்டை வித்தோம்..” உண்மையை உடைக்கும் ராகவா லாரன்ஸ் – சுவாரஸ்யமான தகவல்கள் கொண்ட முழு வீடியோ இதோ..

பொன்னியின் செல்வன் பட நடிகர்கள் திரிஷா, ஜெயம் ரவி ட்விட்டர் கணக்கில் காணமல் போன Blue tick...- அதிர்ச்சியில் ரசிகர்கள்.. காரணம் இதோ..
சினிமா

பொன்னியின் செல்வன் பட நடிகர்கள் திரிஷா, ஜெயம் ரவி ட்விட்டர் கணக்கில் காணமல் போன Blue tick...- அதிர்ச்சியில் ரசிகர்கள்.. காரணம் இதோ..

“அவருக்காக அதை பண்ணேன்..” தளபதி விஜய் குறித்து நடிகர் ராகவா லாரான்ஸ் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்.. – Exclusive interview இதோ..
சினிமா

“அவருக்காக அதை பண்ணேன்..” தளபதி விஜய் குறித்து நடிகர் ராகவா லாரான்ஸ் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்.. – Exclusive interview இதோ..