உலக நாயகன் கமல் ஹாசனின் சாச்சி 420 படத்தில் அவருக்கு மகளாக நடித்தவர் பாத்திமா சனா ஷேக். வளர்ந்த பிறகு ஆமீர் கானின் தங்கல் படத்தில் நடித்து பிரபலமானார். அதன் பிறகு அவர் நடிப்பில் வெளியான படங்களுக்கு பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை. இருப்பினும் நம்பிக்கையுடன் நடிப்பில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார் பாத்திமா. 

இந்நிலையில் அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. பேட்டியில் பாத்திமா கூறியதாவது, நான் ஜிம்மில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்தபோது ஒரு ஆண் என்னையே பார்த்ததை கவனித்தேன். 

எதற்காக இப்படி பார்க்கிறாய் என்று கேட்டேன். அந்த நபரோ, அது என் இஷ்டம் என்றார். அறை வேணுமா என்று நான் கேட்டதற்கு அறையேன் என்றார். உடனே நான் அவரை அறைந்தேன், பதிலுக்கு அவர் என்னை குத்திவிட்டார். இதையடுத்து எனக்கு மயக்கம் வந்துவிட்டது என்றார்.

பாத்திமா மேலும் கூறியதாவது, மயக்கம் தெளிந்த உடன் என் அப்பாவை அழைத்து நடந்ததை கூறினேன். அவர் மூன்று நபர்களை அழைத்துக் கொண்டு வந்தார். அப்பாக்கள் எப்படி என்று உங்களுக்கே தெரியும். என்னை தாக்கியவர் ஓடத் துவங்கினார். 

என் அப்பா, சகோதரர், அவரின் நண்பர்கள் வந்து எங்கள் பிள்ளையை எவன்டா தொட்டது என்று கேட்டார்கள். என் அப்பா தான் எனக்கு மிகப் பெரிய ஆதரவு என்றார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பாத்திமா சனா ஷேக் திடீர் என்று ஒரு முடிவு எடுத்துவிட்டார். அவர் சமூக வலைதளங்களில் இருந்து பிரேக் எடுத்துள்ளார். அதற்கு என்ன காரணம் என்பதை அவர் தெரிவிக்கவில்லை. 

அனில் கபூருடன் சேர்ந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார் பாத்திமா. முன்னதாக பாத்திமாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.