போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இயக்குனர் அல்லாது பாடலாசிரியர், நடிகர் என பன்முக திறமையுள்ளவர். இவரது இயக்கத்தில் வெளிவந்த நானும் ரௌடி தான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்திருக்கிறார். நடிகர் சிவகார்த்திகேயன் வைத்து படம் செய்வதாக இருந்தது. சில காரணங்களால் இந்த படம் துவங்காமலே இருந்தது. 

vigneshsivan

தற்போது அடுத்த படத்திற்கான பணியை துவங்கிவிட்டார் விக்னேஷ் சிவன். அவர் ஏற்கனவே எழுதியிருந்த காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை துவங்கவுள்ளார் என்ற செய்தி கலாட்டா செவிகளுக்கு எட்டியது. விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க நயன்தாரா ஹீரோயினாக இருக்கக்கூடும் என்று பேசப்படுகிறது. 

vigneshsivan

இரண்டு நாயகிகள் கொண்ட இந்த கதையில் கூடுதலாக இணையவுள்ள ஹீரோயின் யார் என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.