வந்தா ராஜாவாதான் வருவேன் படத்திற்கு பிறகு STR , ஹன்சிகா நடிக்கும் மகா படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.இதனை தொடர்ந்து பத்துதல படத்திலும்,வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் மாநாடு படத்திலும் நடித்து வருகிறார்.STR என்ன செய்தாலும் அவரை பற்றி என்ன செய்தி வந்தாலும் அது வைரலாகி விடும்.சமீபத்தில் சிம்புவின் ட்ரான்ஸபார்மேஷனை பார்த்து பலரும் ஆச்சரியத்தில் உள்ளனர்.

மாநாடு படத்திற்கு முன் STR பாண்டியநாடு,ஜீவா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கிய சுசீந்திரன் இயக்கத்தில் தயாராகியுள்ள ஈஸ்வரன் படத்தில் நடித்திருந்தார்.இந்த படம் பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி 14ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இதனை தொடர்ந்து மாநாடு படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் STR.இதனை தொடர்ந்து பத்து தல,கெளதம் மேனன் இயக்கத்தில் நதிகளிலே நீராடும் சூரியன்,நடிகர் சங்கத்திற்காக ஒரு படம் என்று செம பிஸியாக இருக்கிறார் சிம்பு.

இவரது மாநாடு படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் ஷூட்டிங்கில் விறுவிறுப்பாக கலந்துகொண்டு வருகிறார் சிம்பு.சமீபத்தில் ஒரு விழாவில் கலந்துகொண்ட படத்தின் இயக்குனரிடம் மாநாடு படத்தின் ரிலீஸ் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த வெங்கட் பிரபு படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இன்னும் கிட்டத்தட்ட 12 நாட்கள் மட்டுமே மீதமுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.அரசியல் படம் என்பதால் அதிக கூட்டம் சேர்த்து எடுக்கப்படும் காட்சிகள் மட்டும் மீதமுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.படத்தின் ஷூட்டிங் முடிந்ததும் ரிலீஸ் தேதி உறுதிசெய்யப்படும் என்று தெரிகிறது.