தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மக்கள் உள்ளம் கவர்ந்த நிகழ்ச்சி பிக்பாஸ். முதல் இரண்டு சீசன்கள் ஒளிபரப்பாகி முடிந்த நிலையில், தற்போது மூன்றாம் சீசன் துவங்கியது. கடந்த இரு சீசன் போலவே இந்த சீசனையும் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார். 

kasthoori

ஃபாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்தியா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்ஷி, மதுமிதா, அபிராமி மற்றும் கஸ்தூரி வீட்டை விட்டு வெளியேறினார்கள். இந்நிலையில் பத்திரிக்கை மற்றும் ஊடங்களுக்கு பேட்டியளித்தார் நடிகை கஸ்தூரி.

kasthuri

vanitha

அப்போது பேசுகையில் பிக்பாஸ் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டது. வனிதாவை தான் வாத்து என்று கூறவில்லை என்பதை தெளிவாக எடுத்துரைத்தார் கஸ்தூரி. நாட்டிற்கு நல்லது ஏதாவது கூற வேண்டும் என்ற எண்ணத்தில் பிக்பாஸ் வீட்டில் நுழைந்தேன், ஆனால் அவர்களுக்கு காதல், கண்ணீர், சோகம் போன்ற கன்டென்ட் தான் தேவைப்படுகிறது என்பது தெளிவாக தெரிகிறது. கஸ்தூரியை பேசாமல் வைத்திருப்பது சாதனை இல்லையா ? அதை பிக்பாஸ் செய்துள்ளதா ? எடிட்டர்கள் செய்தார்களா ? என்று கூறியுள்ளார்.