2003-ம் ஆண்டு வெளியான இயற்கை படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.பி.ஜனநாதன். இதைத்தொடர்ந்து ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடைமை என பல்வேறு புரட்சிகரமான கருத்துக்களை கொண்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். தமிழ் திரையுலகின் சிறந்த இயக்குனர்களில் 

விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு, தன்ஷிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் லாபம். இந்தப் படத்தை எஸ்.பி.ஜனநாதன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முற்றிலுமாக முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்தப் படத்தின் இறுதிக்கட்ட எடிட்டிங் பணிகளில் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் தீவிரமாகப் பணிபுரிந்து வந்தார். இன்று (மார்ச் 11) மதியம் எடிட்டிங் பணிகளிலிருந்து வீட்டிற்குச் சாப்பிடச் சென்றுள்ளார். மீண்டும் எடிட்டிங் பணிக்கு நீண்ட நேரமாகத் திரும்பாத காரணத்தால் அவருடைய உதவியாளர்கள் வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளனர். அப்போது அவர் வீட்டில் சுயநினைவின்றி இருந்துள்ளார்.

உடனடியாக அவரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மருத்துவர்கள் அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துப் பரிசோதித்து வருகிறார்கள். அவருடைய நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிகிறது.

புரட்சிகரமான கருத்துகளை தன் படங்கள் மூலமாகக் கூறுபவர் இயக்குனர் ஜனநாதன். அவரது திரை சிந்தனையை பலர் பின்பற்றி வருகின்றனர். இவரது படங்கள் வெறும் படமாக இல்லாமல் பாடமாக இருந்து வருகிறது. இவர் விரைவில் பூரண நலம் பெற பிரார்த்தனை செய்து வருகின்றனர் ரசிகர்கள்.