அண்ணன் ஒருவன், தனது தங்கையின் தோழியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் தான் இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் அமேதி மாவட்டத்தில் உள்ள ஜகதீஷ்பூர் பகுதியில் 17 வயதான அளம் பெண் ஒருவர், தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். 

அந்த இளம் பெண்ணுக்கு ஒரு நெருங்கிய தோழி ஒருவர் இருந்தார். இதனால், அந்த பெண் தன்னுடைய நெருங்கிய தோழியை பார்ப்பதற்காக, அடிக்கடி அவரின் வீட்டுக்கு வந்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

அப்போது, அந்த தோழியின் சகோதரர் சுனில், அந்த பெண்ணை பார்த்து அவரின் அழகில் மயங்கிய நிலையில், அந்த பெண்ணின் மீது சபலப்பட்டு உள்ளார்.

பின்னர், இந்த சபலமே, அந்த பெண்ணை எப்படியும் அடைந்த தீர வேண்டும் என்ற அளவுக்கு, அவரை மாற்றிய நிலையில், இது தொடர்பாக அவர் திட்டமிட்டு வந்திருக்கிறார்.

இதனையடுத்து, சற்று யோசித்த அந்த இளைஞன், தனது தங்கையின் உதவியோடு, தங்கையின் தோழியை அடைவதற்கான திட்டத்தையும் தீட்டியிருக்கிறார்.

அதன் படி, கடந்த ஆகஸ்டு 21 ஆம் தேதி அன்று தனது தங்கையிடம் அவரின் தோழியை அழைத்துக் கொண்டு அந்த பகுதியில் உள்ள ஒரு வயல் வெளிப்பக்கம் வர சொல்லியிருக்கிறார்.

அண்ணன் கூறிய படியே, அவரது தங்கையும் தனது தோழியை அழைத்துக் கொண்டு இயற்கை உபாதைக்காக, குறிப்பிட்ட அந்த வயல் வெளிப்பக்கம் அழைத்து வந்திருக்கிறார்.

அப்போது , அங்கு மறைந்திருந்த அந்த இளைஞன் சுனில், அந்த பெண்ணை அங்கிருந்து கடத்திச் சென்று, ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து, அந்த பெண்ணின் முகத்தில் மண்ணை அள்ளி குழைத்துப் பூசி உள்ளார். 

இதில், அவர் தடுமாறி கண் விழிக்க முடியாமல் போகவே, அந்த பெண்ணை அதே இடத்தில் வைத்து சுனில் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.

அதன் பிறகு, அந்த இளம் பெண்ணை அங்கேயே விட்டு விட்டு, சுனில் அங்கிருந்து ஓட்டம் பிடித்திருக்கிறார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண், எழ முடியாமல் அங்கிருந்து மெல்ல எழுந்து, நடந்து தன்னுடைய வீட்டிற்குச் சென்று உள்ளார்.

வீட்டில் பெற்றோர் முன்னிலையில் கதறி அழுத அந்த பெண், தனக்கு நேர்ந்த பாலியல் பலாத்காரம் குறித்துக் கூறி இருக்கிறார்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த அந்த இளம் பெண்ணின் பெற்றோர், இது குறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்து உள்ளனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், பாலியல் பலாத்கார குற்றத்தில் ஈடுபட்ட சுனிலை அதிரடியாகக் கைது செய்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த குற்றச்சாட்டுக்கு ஆளான சுனிலின் தங்கையிடமும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.