பெண் ஊழியர் ஒருவருடன் உலக பணக்காரர் பில்கேட்ஸ் கள்ளக் காதல் உறவில் இருந்தது தொடர்பாக, மைக்ரோசாப்ட் நிறுவனம் விசாரணை நடத்தியதாக அதிர்ச்சித் தரும் தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலகின் மிகப்பெரிய பணக்காரர் 65 வயதான பில்கேட்ஸ், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனராக இருந்து வருகிறார். இவரது மனைவி 56 வயதான மெலிண்டா கேட்ஸ் இருக்கிறார். இந்த தம்பதிக்கு கடந்த 1994 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், ரோரி ஜான் கேட்ஸ், ஜெனிபர் கேதரின் கேட்ஸ், போப் அடில் கேட்ஸ் என மொத்தம் 3 பிள்ளைகள் உள்ளனர். 

இந்த ஆண்டு நிலவரப்படி பில்கேட்ஸ் சொத்து மதிப்பு ரூ.9 லட்சத்து 74 ஆயிரத்து 250 கோடி ரூபாயாக இருக்கிறது. இதனால், உலக பணக்காரர்களின் வரிசையில் தற்போது அவர் 4 ஆம் இடத்தில் இருக்கும்

இப்படியான நிலையில், உலகின் மிகப் பெரிய பணக்காரரான பில்கேட்ஸ் குடும்பத்தில் யார் கண் பட்டதோ தெரியவில்லை, 27 ஆண்டு கால அவர்களது திருமண வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டு, அது தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. பில்கேட்ஸ் - மெலிண்டா கேட்ஸ் தம்பதியரின் தற்போது பிரிந்து விட்டனர். 

ஆனால், அதன் தொடர்ச்சியாக, “பாலியல் வழக்குகளில் தண்டனை பெற்றவரும், மறைந்த தொழிலதிபருமான ஜெப்ரி எப்ஸ்டெய்ன் என்பவருடன், மைக்ரோசாப்ட் அதிபர் பில் கேட்ஸ், மிக நெருங்கிய தொடர்பில் இருந்த காரணத்தால், அவரது மண வாழ்க்கை முடிவுக்கு வந்திருப்பதாக” அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டு மேலும் பரபரப்பைக் கிளப்பின. 

“பில்கேட்ஸ் உடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் 66 வயதான ஜெப்ரி எட்வர்ட் எப்ஸ்டெய்ன், அமெரிக்காவில் நிதி சார்ந்த தொழில்களில்” ஈடுபட்டு வந்திருக்கிறார். 

“இவர் மீது பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு, சிறை தண்டனையை அவர் பெற்றார். அத்துடன், சிறுமியரை வைத்து மிகப் பெரிய பாலியல், நெட்வொர்க் ஒன்றையும் நடத்தி வந்த வழக்கில், இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த சர்சை அடங்குவதற்குள் தற்போது, மைக்ரோசாப்ட் அதிபர் பில் கேட்ஸ் மீது, மீண்டும் ஒரு பாலியல் சர்சை எழுந்து உள்ளது.

அதாவது, மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிபுரிந்த பெண் ஒருவருடன், பில்கேட்ஸ் திருமணத்தைத் தாண்டிய கள்ளக் காதல் உறவில் இருந்தார் என்பது தான் அது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்த அந்த நிறுவனத்தின் வாரிய உறுப்பினர்கள் கடந்த 2020 ஆம் ஆண்டு முடிவெடுத்ததாகவும், அந்த விசாரணையின் போது, அந்த வாரியத்தில் உறுப்பினராக பில்கேட்ஸ் இருப்பது பொருத்தமாக இருக்காது என்று, பிற உறுப்பினர்கள் கருத்து தெரிவித்ததாகவும் அமெரிக்க ஊடகம் தற்போது மற்றொரு செய்தியை வெளியிட்டுப் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

மேலும், இந்த புகார் தொடர்பாக விசாரிப்பதற்காக, கடந்த 2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தனியார் சட்ட நிறுவனத்தை மைக்ரோசாப்ட் நிறுவன வாரிய உறுப்பினர்கள் பணியமர்த்தியதைப் பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் தெரிவித்ததாக, வால் ஸ்டீரிட் ஜெர்னல் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

குறிப்பாக, “வாரியத்தின் விசாரணை முடிவதற்கு முன்பே, பில்கேட்ஸ் வாரியத்தின் உறுப்பினர் பதவியில் இருந்து விலகியதாகவும்” அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
 
கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான், பில் கேட்ஸ் - மெலிண்டா கேட்ஸ் தம்பதியினர், தங்களது விவாகரத்தை முறைப்படி அறிவித்தனர். இதனால், அவர்களது 27 ஆண்டுக்கால திருமண உறவு முடிவுக்கு வந்தது. 

இவர்களின் இந்த மனமுறிவுக்கு, பில் கேட்ஸின் இந்த மாதிரியான பழக்க வழக்கங்கள் தான் காரணமாக இருக்கும் என்றும், தற்போது செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது குறிப்பிடத்தக்கது.