“மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் நினைவிடம் அமைக்கப்படும்” என்று, சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அறிவித்து உள்ளார்.

தமிழக சட்டப் பேரவையில்  விதி எண் 110 ன் கீழ்  முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சற்று முன்பு உரையாற்றினார். 

அப்போது பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின், “ சென்னை மெரினா காமராஜர் சிலையில் 39 கோடி ரூபாய் செலவில் 2.21 ஏக்கரில் கலைஞர் கருணாநிதிக்கு நினைவிடம் கட்டப்படும்” என்று, அறிவித்தார்.

“கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கை, சிந்தனை குறித்து நவீன ஔி படங்களுடன் நினைவிடம் அமைக்கப்படும் எனவும், கடந்த அரைநூற்றாண்டு காலத்தில் நிரந்திர தலைப்புச் செய்தியாக இருந்தவர் கலைஞர் கருணாநிதி” என்றும், மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.

ஏற்கனவே, நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கலைஞருக்கு நினைவிடம் கட்டப்பட உள்ளது என்றும், இன்று நாம் பார்க்கும் தமிழ்நாடு கலைஞர் உருவாக்கியது” எனவும், அவர் பேசினார்.

மேலும், “தமிழ் மொழி அந்தஸ்து பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உரிமை பெற்று தந்தவர் கலைஞர்” என்றும், முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டு பேசினார்.

“நவீன தமிழ் நாட்டை உருவாக்கிய சிற்பி தான் கலைஞர்” என்றும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புகழாராம் சூட்டினார். 

அத்துடன், “இந்திய அரசியலை வழி நடத்டதிய அரசியல் ஞானி கலைஞர்” என்றும், குறிப்பிட்டு பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் “என் பாதை சுயமரியாதை, தமிழ் நெறி காக்கும் பாதை” என்றும், அவர் பேசினார் 

“13 முறை தொடர்ந்து எம்.எல்.ஏ. வாக இருந்த கலைஞரிடம், தோல்வி அவரை தொட்டதே இல்லை என்றும், வெற்றி அவரை விட்டதே இல்லை” என்றும், அவர் கருணாநிதியின் புகழ் பாடினார்.

“5 முறை முதலமைச்சராக இருந்து தமிழ் வளர்ச்சிக்கு வழி வகுக்கும் திட்டம் வகுத்தவர் கலைஞர் என்றும், இத்தைய பெருமைகள் கொண்ட மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞருக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்கப்படும்” என்றும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

“அவரது சிறப்புச் சித்திரங்களுக்குச் சான்றாக வள்ளுவர் கோட்டமும், குமரியில் 133 அடி வள்ளுவர் சிலையும் எழுந்திருக்கின்றன என்றும்,  தன்னை வசைபாடியவர்களையும் வாழ்த்தியவர் கருணாநிதி என்றும், இப்படியாக அரை நூற்றாண்டாக நிரந்தர தலைப்புச் செய்தியாக இருந்தவர் கருணாநிதி” என்றும், முதலமைச்சர் ஸ்டாலின் சுட்டிக்காட்டி பேசினார்.