கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த, காதலியின் 4 வயது சிறுவனை, கள்ளக் காதலன் அடித்துக் கொன்ற வழக்கில் தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.  

“அரசனை நம்பி புருசனை இழந்த கதைகள் தான், இந்த சமூகத்தில் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அரசனை நம்பி புருசனை கை விட்டதை விட, கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகனையே, காதலன் அடித்து கொலை செய்யும் அளவுக்கு, கள்ளக் காதல் படுக்கை விரித்து இடம் கொடுத்துவிட்டது என்பது தான் வேதனையின் உச்சம்!”

Illicit lover absconding after attacking 4 year child

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அடுத்த டானா பகுதியைச் சேர்ந்த அந்தோனி பிரகாஷ்  - தீபா தம்பதியினர், காதலித்து கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 4 வயதில் லோகேஷ் என்ற மகன் இருந்தான்.

அந்தோனி பிரகாஷ் லாரி ஓட்டுநராக பணியாற்றி வருவதால், மாதத்தில் 15 நாட்கள் வெளியூரில் இருப்பது வழக்கம். 

இதனிடையே, தனியார் நிறுவனத்தின் சுய உதவி குழுவில் சேர்ந்த தீபா, அங்கு கடன் வாங்கி உள்ளார்.

இதனையடுத்து, பெற்ற கடனை தவணை முறையில் வசூலிக்க அருணாசலபுரத்தை சேர்ந்த சொரிமுத்து என்பவர் வருவது வழக்கம். அப்போது அவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம்,  நாளடைவில் இவர்களுக்குள் கள்ளக் காதலாக மாறியுள்ளது. 

Illicit lover absconding after attacking 4 year child

இந்த விசயம் மகன் மூலம் ஏற்கனவே தெரிந்து, மனைவி தீபாவை, கணவர் அந்தோணி பிரகாசம், கண்டித்துள்ளார். ஆனால், இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத தீபா, தனது கள்ளக் காதலைக் கைவிடாமல் தொடர்ந்து வளர்த்து வந்துள்ளார்.

இதனிடையே தீபா, தீபாவின் 4 வயது மகன், சொரிமுத்து ஆகிய 3 பேரும் அருகில் உள்ள கோயிலுக்குச் சென்றுள்ளனர். அப்போது, அந்தோணி பிரகாசம், தீபாவிற்கு வீடியோ கால் செய்துள்ளார். அந்த நேரத்தில் தீபாவின் செல்போன், மகன் கையிலிருந்துள்ளது.

தந்தையின் போனை அட்டன் பண்ணி பேசிய மகன், “அம்மாவும், நானும் சொரிமுத்து மாமாவுடன்  கோயிலுக்கு வந்திருக்கிறோம்” என்று கூறி உள்ளார். மேலும், சொரிமுத்து பக்கத்தில் அமர்ந்திருப்பதையும் வீடியோ கால் மூலம் தனது தந்தையிடம் வீடியோவில் காட்டி உள்ளார். 

இதனால், கடும் ஆத்திரமடைந்த சொரிமுத்து, அந்த 4 வயது சிறுவனைக் கண்மூடித்தனமாகக் கடுமையாகத் தாக்கி உள்ளார். இதனையடுத்து, படுகாயம் அடைந்த மகனை மீட்டு, தீபா அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு சிறுவனுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுவன், பரிதாபமாக உயிரிழந்தான்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவான சொரிமுத்துவை தேடி வருகின்றனர். அத்துடன், கள்ளக் காதலில் ஈடுபட்டு, மகன் சாக காரணமாக இருந்த தாய் தீபாவை போலீசார் கைது செய்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.