சென்னையில் பட்டப் பகலில் கஞ்சா போதையில் பெண்ணிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் ரயில் நிலையத்தில் உள்ள சுரங்கப்பாதை பகுதியில், பட்ட பகலில் பாலாஜி, செந்தில்குமார், அலெக்ஸ் ஆகிய 3 பேரும் மது மற்றும் கஞ்சா போதையில் நிதானமில்லாமல் நடத்து வந்துகொண்டிருந்தனர்.

3 Chennai youngsters arrested for Misbehaving with girl

அப்போது, பெருங்களத்தூர் ரயில் நிலையத்தில் உள்ள சுரங்கப்பாதை வழியாக ஒரு பெண் வந்துகொண்டிருந்தார். அந்த பெண்ணை வழிமறித்து 3 பேரும் நின்றுள்ளனர். அதில், ஒருவன் பெண்ணை கட்டிப்பிடிப்பது போல், பெண்ணின் மீது சாய்ந்து சில்மிஷத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. அப்போது, மற்ற இருவரும் பெண்ணின் பின் பக்கம் வந்து நின்றுகொண்டு, பெண்ணை மிரட்டிக்கொண்டு இருந்ததாகத் தெரிகிறது. 

3 Chennai youngsters arrested for Misbehaving with girl

போதை ஆசாமியின் பாலியல் துன்புறுத்தலால் பயந்துபோன அந்த பெண், சத்தம் போட்டு கடும் கூச்சலிட்டுள்ளார். இதனையடுத்து, அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் ஓடிவந்து, 3 பேரையும் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

பின்னர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து விரைந்து வந்த போலீசார், 3 பேரையும் கைது செய்து அழைத்துச் சென்றனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் 3 பேரும், படப்பை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் பெயிண்டர் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. மேலும், மது மற்றும் கஞ்சா போதையில் பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாகவும் அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

3 Chennai youngsters arrested for Misbehaving with girl

இதனையடுத்து, அவர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, சென்னையில் பட்டப்பகலில் கஞ்சா போதையில் பெண்ணிடம் 3 இளைஞர்கள் தவறாக நடக்க முயன்ற சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.