“பாலியல் உறவு கொள்வதன் மூலம் விளையாட்டு வீரர்களுக்கு அதீத சக்தி கிடைப்பதாக மருத்துவ உலகம் நம்புகிறது” என்று, ஒலிம்பிக் போட்டிகளில் 3 தங்க பதக்கங்களைக் குவித்த நீச்சல் வீராங்கனை அல்லா சிஷ்கினா மனம் திறந்து பேசி உள்ளார்.

ஒலிம்பிக் போட்டிகளில் மகளிர் நீச்சல் பிரிவில் 3 தங்கம் பதக்கம் வென்ற ரஷ்யா நாட்டு வீராங்கனை அல்லா சிஷ்கினா என்பவர்தான் மனம் திறந்து இந்த கருத்தைக் கூறியிருக்கிறார்.

32 வயதான ரஷ்ய நீச்சல் வீராங்கனை அல்லா சிஷ்கினா, சமீபத்தில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றார். 

இதற்கு முன்பு ரியோவில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியிலும், அதற்கு முன்பு 2012 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக்கிலும் நீச்சல் பிரிவில் மொத்தம் 3 தங்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார்.

இந்த சூழலில், ரஷ்யா நாட்டில் இருந்து வெளிவரும் “ஸ்போர்ட் எக்ஸ்பிரஸ்” என்ற ஊடகத்திற்குச் சிறப்பு பேட்டி அளித்து உள்ள நீச்சல் வீராங்கனை அல்லா 
சிஷ்கினா, “நான் எப்போதும் மருத்துவ ஆராய்ச்சிகளைப் பெரிதும் நம்பி இருப்பவள்” என்று, குறிப்பிட்டு உள்ளார். 

“நான் என்னுடைய மருத்துவரான டெனிசிடம் கலந்து ஆலோசித்தேன் என்றும், அதன் படி அறிவியல் சமூகம் கூறும் கருத்துக்களையும் கவனிக்க வேண்டியிருக்கிறது” என்றும், சுட்டிக்காட்டி உள்ளார். 

“அறிவியலின் படி, நமக்கு அதீத சக்தி வேண்டும் என்றால், பாலுறவு கொள்ள வேண்டும் என்றும்” என்றும், அவர் வலியுறுத்தி உள்ளார். 

தொடர்ந்து பேசியிருக்கும் அல்லா சிஷ்கினா, “ஒரு வேளை நமக்கு நீண்ட நேர வேலை இருக்கும் சூழலில், தினமும் சராசரியான வேலை சூழல் இருந்தாலும், அப்போது பாலுறவு தேவைப்படாது” என்றும், அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார். 

“இந்த விஷயம் ஒவ்வொருவருக்கும், அவரவர் சூழல் மற்றும் வேலைகள் சார்ந்து முற்றிலும் மாறுபடும்” என்பதையும், அல்லா சிஷ்கினா சுட்டிக்காட்ட தவறவில்லை.

அத்துடன், “பாலியல் உறவு கொள்வது என்பது, அவரவர் விருப்பம்” என்றும் அவர் கூறியுள்ளார். 

“பாலுறவுக்கொள்வதன் மூலமாக, அதற்கான பலன் உங்களுக்குக் கிடைக்கும் என்றால், அதனை நீங்கள் மேற்கொள்ளலாம்” என்றும், அவர் ஆலோசனைகளை வழங்கி உள்ளார். 

குறிப்பாக, “விளையாட்டு வீரர்களுக்கு பாலியல் உறவு நல்ல பலனைக் கொடுக்கிறது என்றும், பாலியல் உறவு மூலம் டெஸ்டோஸ்ட்ரோன் testosterone என்கிற ஹார்மோன் செயல்பாடுகள் அதிகரிக்கிறது” என்றும், அவர் சுட்டிக்காட்டி உள்ளார். 

“அதனால், விளையாட்டு வீரர்களின் தேவையற்ற ஆக்ரோஷம் கட்டுப்படுத்தப்படும் என்றும், தசை வலிமையை மட்டுமே நம்பி விளையாடப்படும் போட்டிகளுக்கு விளையாட்டு வீரர்கள் முழுவதும் உச்சம் தொடாத பாலுறவை மேற்கொள்ள வேண்டும்” என்றும், அவர் அறிவுரை வழங்கி உள்ளார்.

“அப்போது தான், விளையாட்டு வீரர்கள் விளையாட்டுப் போட்டிகளில் நல்ல முடிவு கிடைக்கும் என்றும், அதற்கான சூழலை இது போன்ற பாலுறவு ஏற்படுத்திக் 
கொடுக்கும்” என்றும், அவர் உறுதிப்படத் தெரிவித்து உள்ளார்.

மேலும், “நீச்சல் வீராங்கனைகளின் உடலமைப்பு பற்றிப் பேசிய அவர் “ஒவ்வொரு நீச்சல் வீராங்கனைகளுக்கும் வித்தியாசமான உடலமைப்பு இருக்கிறது என்றும், பெரிய மார்பகங்கள் இருக்கும் வீராங்கனைகளால் தண்ணீரில் எளிதாக மிதக்க முடிகிறது என்றும், போட்டிகளிலும் எளிதாக ஜெயிக்க முடியும் என்ற எழுதப்படாத கூற்றுகள் இருக்கிறது” என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். 

“ஆனால், உண்மையில் பெரிய மார்பகங்களை வைத்துக்கொண்டு நீச்சல் பயிற்சியை மேற்கொள்வதே சிரமம் என்றும், இதனால் பல வீராங்கனைகள் மார்பக அறுவைச் சிகிச்சை செய்துகொள்கின்றனர் என்றும், இது மிகவும் செலவு மிக்கது மற்றும் ஆபத்தானதும்” என்றும், அல்லா சிஷ்கினா தனது பேட்டியில் தெரிவித்து உள்ளார்.