தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர் விக்னேஷ் சிவன் நடிகர் சிலம்பரசன்.TR கதாநாயகனாக நடித்த போடா போடி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். பிறகு தனது இரண்டாவது படமாக நடிகர் தனுஷ் தயாரிப்பில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி - லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இணைந்து நடிக்க, வெளிவந்த நானும் ரவுடிதான் திரைப்படத்தில் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் கவனத்தையும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தன் பக்கம் ஈர்த்தார். தொடர்ந்து சூர்யா - விக்னேஷ் சிவன் கூட்டணியில் வெளிவந்த தானா சேர்ந்த கூட்டம் திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற, மீண்டும் விஜய் சேதுபதியுடன் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் விக்னேஷ் சிவன் இணைந்தார். மக்கள் செல்வன் விஜய் சேதுபதியோடு லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் இணைந்து நடிக்க விக்னேஷ் சிவன் இயக்கிய காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் கடந்த (2022) ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் ஆனது.

இதனை அடுத்து தனது அடுத்த திரைப்படத்தில் அஜித் குமாரை இயக்கும் வாய்ப்பை இயக்குனர் விக்னேஷ் சிவன் பெற்றார். லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அஜித் குமார் கதாநாயகனாக நடிக்க AK62 திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ்வரன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது பின்னர் சமீபத்தில் திரைப்படம் கைவிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. எனவே மீண்டும் அஜித் குமாரோடு வேறு ஒரு படத்தில் விரைவில் விக்னேஷ் சிவன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக தனது அடுத்த திரைப்படம் விரைவில் தொடங்க இருப்பதாக விக்னேஷ் சிவன் தெரிவித்திருந்தார். இது குறித்து அறிவிப்புகள் விரைவில் வர இருக்கின்றன. இதனிடையே நமது கலாட்டா தமிழ் சேனலில் கேம் சேஞ்சர்ஸ் வித் சுகாசினி மணிரத்னம் சிறப்பு பேட்டியில் பேசிய இயக்குனர் விக்னேஷ் சிவன் பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்

அந்த வகையில், ஒருபுறம் பாலா, வெற்றிமாறன், செல்வராகவன், மிஷ்கின் ஆகியோர் இருக்கிறார்கள் இதற்கு அடுத்தது நீங்கள், பிரதீப் ரங்கநாதன் தான் நாளைய தமிழ் சினிமாவின் பிரதிநிதிகளாக இருப்பீர்கள் என நினைக்கிறோம் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என கேட்டபோது, “நானும் பழசு தான் நீங்கள் புதுப்பிக்கிறீர்கள்” என நினைக்கிறேன். என பதிலளித்தார். தொடர்ந்து அவரிடம், நீங்கள் திரைப்படங்களை கையாளும் விதமும் இயக்குனர் பிரதீப் நங்கநாதன் கையாளும் விதமும் மக்களுக்கு பிடித்திருக்கிறது என தோன்றுகிறது நீங்கள் இருவரும் இணைந்து பணியாற்ற வாய்ப்பு இருக்கிறதா? என கேட்டபோது, “ஆமாம் அதை செய்வதற்கு முயற்சித்து வருகிறோம்... இன்னும் பி மற்றும் சி செக்டார் பார்வையாளர்களுக்கும் புரிகிற மாதிரி அவர் காட்சி எழுதும் விதம் இன்னும் சிறப்பாக இருந்தது.” என தெரிவித்தார். தொடர்ந்து உங்களது இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பதை எதிர்பார்க்கலாமா? எனக் கேட்டபோது, “அதைத்தான் செய்ய முயற்சித்து வருகிறோம். அதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன” என தெரிவித்துள்ளார். இயக்குனர் விக்னேஷ் சிவனின் அந்த முழு பேட்டி இதோ…