தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி - லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் இணைந்து நடித்த காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ச்சியாக தரமான FEEL GOOD திரைப்படங்களை கொடுத்து வரும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அடுத்து தயாராகும் புதிய திரைப்படத்தில் நடிகர் அஜித்குமார் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இருப்பினும் சமீபத்தில் இந்த படம் கைவிடப்படுவதாக தகவல்கள் வெளிவந்ததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஆனாலும் விரைவில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித்குமார் புதிய படத்தில் நடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அது குறித்த அறிவிப்புகள் விரைவில் வரலாம் எனவும் தெரிகிறது.

இதனிடையே நமது கலாட்டா தமிழ் சேனலில் நடிகையும் இயக்குனருமான சுஹாசினி மணிரத்னம் அவர்களின், கேம் சேஞ்சர்ஸ் வித் சுகாசினி மணிரத்னம் சிறப்பு நேர்காணலில் கலந்து கொண்ட இயக்குனர் விக்னேஷ் சிவன், பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில், “அவரோடு இணைந்து பணியாற்றிய நட்சத்திரங்களுடன் சுவாரஸ்யமான உரையாடல் எப்படி இருக்கும்? முதலில் சிலம்பரசன்.TR அவர்கள் உடனான உரையாடல்கள் எப்படி இருக்கும்?” என கேட்டபோது, “உண்மையில் நான் அவருடைய பள்ளி நண்பன்... ஒரே பள்ளியில் படித்தோம்… அதனால் ரொம்ப நாட்களாக ரொம்ப வருஷமாக தெரியும்... வேலை என்பதை தாண்டி நண்பர்களாக நிறைய பேசியிருக்கிறோம். நிறைய நாட்கள் பயணித்திருக்கிறோம். எனவே இது எப்போதும் ஒரு நல்ல உரையாடலாக இருக்கும். சமீபத்தில் கமல் சாருடைய பிறந்தநாள் நிகழ்ச்சியில் சந்தித்தோம். நல்ல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். எனக்காக மிகவும் சந்தோஷப்பட்டார்.” என தெரிவித்தார்.

தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் அவனிடம் நீங்கள் வசனங்கள் சொல்லும் போது விவாதம் செய்வாரா? ஏற்றுக் கொள்வாரா? என கேட்டபோது, “அந்த மாதிரி நான் எதையும் பார்த்தது கிடையாது. அவர் சந்தோஷமாக இருப்பார் போடா போடி சமயத்தில் எல்லாம் என வசனங்களை ரசிப்பார். அவர் ஒரு அற்புதமான நடிகர். ஒரு பயங்கரமான திறமை. அவருக்கு தெரியாதது என்றே ஒன்றும் இல்லை. எல்லாத் துறைகளும் அவருக்கு தெரியும். அவரே பாடல்களும் எழுதுவார், நான் ஆரம்பத்தில் பாடல்கள் எழுதிய போது அவர்தான் என்னை ஊக்குவித்தார். முதலில் நான் டம்மியாக ஒன்று எழுதியபோது அவர் என்னை ஊக்குவித்து உனக்கு இது நன்றாக வருகிறது நீ எழுது என்று சொன்னார் ஆரம்பத்தில் நமக்கு வராது என எதிர்மறையாக சொல்லி இருந்தால் அது போயிருக்கும் ஆனால் இவர் எப்போதும் ஊக்குவிப்பார்” என விக்னேஷ் சிவன் பதிலளித்துள்ளார். இயக்குனர் விக்னேஷ் சிவனின் அந்த முழு பேட்டி இதோ…