மனைவியின் காலிலும் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவேன்... முதல் முறை தனது மனைவி குறித்து மனம் திறந்த ராகவா லாரன்ஸ்! அட்டகாசமான பேட்டி இதோ

முதல் முறை தனது மனைவி குறித்து மனம் திறந்த ராகவா லாரன்ஸ்,raghava lawrence shared about his wife at fans meet | Galatta

ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோக்களில் ஒருவராகவும் பிளாக்பஸ்டர் இயக்குனராகவும் திகழும் ராகவா லாரன்ஸ் அவர்கள் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகும் சந்திரமுகி 2 மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் SJ.சூர்யாவுடன் இணைந்து ஜிகர்தண்டா DOUBLE X  ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். முன்னதாக ராகவா லாரன்ஸ் நடிப்பில் அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகி இருக்கும் ருத்ரன் திரைப்படம் தற்போது தமிழ் புத்தாண்டு வெளியீடாக உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதனிடையே நமது கலாட்டா தமிழ் சேனலில் நடைபெற்ற ராகவா லாரன்ஸ் ரசிகர்கள் கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொண்ட ராகவா லாரன்ஸ் நம்மோடு பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் முதல் முறையாக தனது மனைவி குறித்து ராகவா லாரன்ஸ் பகிர்ந்து கொண்டார். அப்படி பேசுகையில், “என் மனைவியைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால், எங்கேயும் நான் பேசியதில்லை நீங்கள் கேட்டதால் சொல்கிறேன்... நான் என் அம்மா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவேன். மற்றவர்கள் தவறாக கூட எடுத்துக் கொள்ளலாம் என் மனைவி காலிலும் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவேன்… மனசார வாழ்த்துவார். அந்த அன்பு தெரியும். எனக்கு ஒன்று என்றால் துடித்து விடுவார். நான் எப்படி இருக்கிறேனோ அதை கண்ணாடியில் பார்ப்பது போல நான் சிரித்துக் கொண்டிருந்தால் அந்த முகம் சிரித்துக் கொண்டிருக்கும். நான் சோகமாக இருந்தால் அந்த முகம் சோகமாகிவிடும். என்னையே நம்பி வந்த ஒரு ஜீவன். என் அம்மா காலில் விழுந்ததற்கு பிறகு அவர்கள் காலை தொடுகிறேன் என்றால் பாருங்களேன்... அவர் எவ்வளவு பாசிட்டிவாக இருப்பார் என்று... அவர் எனக்கு மிகவும் அதிர்ஷ்டமும் கூட, நான் அவரை திருமணம் செய்து கொண்ட அடுத்த மாதத்திலேயே நடன இயக்குனராகி விட்டேன். அதன்பிறகு அப்படியே ஹீரோவாகி இப்போது இந்த இந்த நிலைமையில் இருக்கிறேன். எல்லோரும் சொல்வார்கள் மனைவி அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம் என்று எனக்கு அமைந்த என் மனைவிக்கு மிக்க நன்றி. ஏனென்றால் இந்த கேரளாவிற்கு ஏதாவது பாதிப்பு என்றால் நான் ஒரு கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன் மேலும் சில விஷயங்களுக்கெல்லாம் நான் கொடுக்க வேண்டும் என நினைப்பேன். அப்படி நான் கொடுக்க வேண்டும் என நினைக்கும் போது, “ஏன் கொடுக்கிறீர்கள்” என்று கூட என்னை கேட்க மாட்டார்கள். இதை கொடுக்கலாமா வேண்டாமா என்று நான் போய் பேசுவேன் அவரிடம், கேரளாவில் இப்படி இருக்கிறது எனக் கேட்பேன். கேரளா எனக்கு மிகவும் பிடிக்கும் சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவில் பிடிக்கும். ஆலப்புழாவில் படகு பயணம் செல்வேன். அந்த இயற்கையெல்லாம் பார்க்கும் போது எனக்கு மிகவும் பிடிக்கும் இது என்ன இது இந்த கேரளா இவ்வளவு இயற்கையாக இருக்கிறது என ரொம்ப ரசித்தேன். ஒருநாள் பார்க்கிறேன் வெள்ளத்தில் வீடுகள் எல்லாம் அடித்து சென்று விட்டன. அதற்காக ஒரு கோடி ரூபாய் கொடுக்கலாம் என இருக்கிறேன் என்று சொன்னேன்.. கொடுங்கள் இதில் என்ன இருக்கிறது அவர்கள் பாவம்... அதேபோல் இங்கே கொரோனா காலகட்டத்தில் ஒரு மூன்று முறை கோடி ரூபாய் நாம் செய்தபோது பண்ணுங்கள் என சொல்லுவார். இதுவே வேறு யாராவது இருந்தால் வேண்டாம் என்று சொல்வார்கள் அல்லவா? என் அம்மாவும் என் மனைவியும் பண்ணுங்கள் என சொல்வதால்தான் என்னால் இதையெல்லாம் செய்ய முடிகிறது. இந்த சமயத்தில் நான் அவர்களுக்கும் நன்றி சொல்கிறேன்” என ராகவா லாரன்ஸ் பதிலளித்தார். ராகவா லாரன்ஸ் அவர்களின் அந்த முழு பேட்டி இதோ…
 

'கமல்ஹாசன் - சிவகார்த்திகேயனின் SK21 பட பணிகள் தொடங்கியதா?'- வைரலாகும் புகைப்படத்தால் உற்சாகத்தில் ரசிகர்கள்!
சினிமா

'கமல்ஹாசன் - சிவகார்த்திகேயனின் SK21 பட பணிகள் தொடங்கியதா?'- வைரலாகும் புகைப்படத்தால் உற்சாகத்தில் ரசிகர்கள்!

விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 பட ஸ்பெஷல் ட்ரீட்... எமோஷ்னலான கோயில் சிலையே வீடியோ பாடல் இதோ!
சினிமா

விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 பட ஸ்பெஷல் ட்ரீட்... எமோஷ்னலான கோயில் சிலையே வீடியோ பாடல் இதோ!

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் 2 பட அடுத்த சர்ப்ரைஸ்… கவனம் ஈர்க்கும் அட்டகாசமான சிவோஹம் பாடல் இதோ!
சினிமா

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் 2 பட அடுத்த சர்ப்ரைஸ்… கவனம் ஈர்க்கும் அட்டகாசமான சிவோஹம் பாடல் இதோ!