செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் சின்னத்திரையில் நெஞ்சம் மறப்பதில்லை என்ற தொடரின் மூலம் தமிழ் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்தவர் சரண்யா.தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்றான ஆயுத எழுத்து தொடரில் நடித்து வருகிறார்.

.



மௌனிகா முக்கிய வேடத்தில் நடித்து வரும் இந்த தொடரில் ஆனந்த் முன்னணி நாயகனாக நடிக்கிறார்.ஸ்யமந்தா,டீனா,ஜனனி அசோக்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.இந்த தொடர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.



தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.தனது காதலன் குறித்து ஒரு கவிதை மடல் எழுதி தங்கள் புகைப்படங்களுடன் வெளியிட்டுள்ளார்.இந்த பதிவு ரசிகர்களிடையே இணையத்தில் வைரலாகி வருகிறது.

.

என் வாழ்வில் நீ வந்தது விதியானால் நீயெந்தன் உயிரன்றோ ❤️ -கண்ணதாசன் * * * * * * * எப்படியான அன்பை அளந்தெடுக்க இப்படியான ஒரு வரியை எழுத முடியும். இத்தனை அடர்த்தியான வரிகளை என்னால் எழுதிவிட முடியுமா தெரியாது. ஆனால் அத்தனை அன்புக்கான என் தேடலின் பதில் நீயென தெரியும். @rahul__sudharshan❤️ வாழ்தல் இனிது 💫

A post shared by SHARANYA TURADI (@sharanyaturadi_official) on

.