பிரம்மாண்டம் என்றால் ஷங்கர் என சொல்லும் அளவிற்கு இந்திய திரை உலகில் பல பிரம்மாண்டமான திரைப்படங்களை இயக்கி ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் இயக்குனர் ஷங்கர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த 2.O திரைப்படத்திற்கு பிறகு உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தை தொடங்கினார்.

இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்து மற்றும் பல தவிர்க்க முடியாத காரணங்களால் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட நிலையில் தனது அடுத்த திரைப்படத்தை அறிவித்த ஷங்கர் இந்த முறை நேரடி தெலுங்கு படத்தை இயக்குகிறார். தெலுங்கு சினிமாவின் முன்னணி நட்சத்திரமான ராம்சரண் கதாநாயகனாக நடிக்கும் #RC15 திரைப்படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார்.

பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் #RC15 திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க, அஞ்சலி, ஜெயராம், இயக்குனர் S.J.சூர்யா, ஸ்ரீகாந்த், சுனில் மற்றும் நவீன் சந்திரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஒளிப்பதிவாளர் திரு ஒளிப்பதிவு செய்ய RC15 படத்திற்கு S.தமன் இசையமைக்கிறார்.

RC15 படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு ஆந்திர மாநிலத்தின் ராஜமுந்திரி பகுதியில் பொது இடங்களில் நடைபெற்று வரும் நிலையில் படப்பிடிப்பு தளத்தில் கூடும் பொதுமக்களும் ரசிகர்களும் படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படங்களையும் வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

இந்நிலையில் #RC15 திரைப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினர் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “#RC15 படத்தின் படப்பிடிப்பு படத்தின் தேவைக்காக பொது இடங்களில் பெரிய கூட்டத்தோடு நடைபெற்று வருகிறது. எனவே அனைவரும் படப்பிப்பின் புகைப்படங்களையும் வீடியோக்களையும் சட்டவிரோதமாக பகிர்வதை தவிர்க்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம். மீறி வெளியிடுவோர் மீது எங்களது ANTI PIRACY TEAM மூலம் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளனர்.

We request everyone to cooperate with the team and report any piracy links to report@blockxtech.com#RC15 #SVC50 pic.twitter.com/M0vswZVV1A

— Sri Venkateswara Creations (@SVC_official) February 16, 2022