விஜய் தொலைக்காட்சியின் பிரபல தொலைக்காட்சி தொடரான 'பாரதி கண்ணம்மா' வெற்றிகரமாக தனது இரண்டாவது சீசனை தொடங்கியுள்ளது.இந்த சீசனில் முதல் பாகத்தில் கண்ணம்மாவாக வினுஷா நடிக்க பாரதி கதாபாத்திரத்தில் சிபி சூர்யன் நடித்து வருகிறார். இதில் பாரதிக்கும் கண்ணம்மா விற்கும் தோழி மது என்ற கதாபாத்திரத்தில் நடிகை ரேஷ்மா நடித்து வருகிறார். இவர் முன்னதாக குறும்படம், யூ டியூப் நிகழ்ச்சிகளில் நடித்தவர் இவர். சில காலம் இடைவெளி விட்டு தற்போது முதல் முதலில் தொலைக்காட்சி தொடரில் நடிக்க வந்துள்ளார் அதன்படி அமைத்தது தான் இந்த பாரதி கண்ணம்மா சீசன் 2. சமூக வலைதளங்களில் புகழ்பெற்ற நீங்கள் இடையில் ஏன் சில காலம் எதிலும் முழுவதுமாக ஈடுபாடுடன் இல்லை‌ என்ற கேள்விக்கு அவர்,

"கதாபாத்திரத்திரங்கள் தேர்வு செய்யும் போது Adjustment என்ற விஷயத்தால் தான் நான் திரைத்துறையில் நடிக்க முயற்ச்சி செய்வதை நிறுத்தி விட்டேன். எந்தவொரு சின்ன கதாபாத்திரத்தில் நடிக்க போனாலும் உங்களுக்கு Adjustment Okay வா னு தான் கேக்குறாங்க.. அப்படி ஓகே சொன்னா நிறைய கதாபாத்திரத்திரங்கள் கிடைக்கும் என்று சொல்றாங்க. போங்கடா எனக்கு தேவையே இல்லை.. வாய்ப்பு வரும்போது வரட்டும்னு இதனால தான் நான் திரையில் தோன்ற முயற்சி செய்வதை நிறுத்தி விட்டேன். " என்றார் ரேஷ்மா.

திரைத்துறையில் பெண் நடிகையாக வளர்ந்து வருவது சாதாரணமாக அமைவதில்லை. பல தடைகளை தாண்டி திரைத்துறையில் வந்தடையும் பெண்கள் சில ஆண்களினால் சந்திக்கும் இன்னல்கள் அதிகம், இதுகுறித்த பல விமர்சனங்கள், குற்றசாட்டுகள் அதிகம் காலம் காலமாக இருந்து வருகிறது. வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் adjustment என்ற சொல்லாடல் புழக்கத்தில் தான் உள்ளது.

மேலும் பல தகவல்களை நமது கலாட்டா மீடியா பேட்டியில் ரேஷ்மா பிரசாத் பகிர்ந்து கொண்ட முழு வீடியோ இதோ..