இந்திய திரை உலகின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவராக கோலிவுட் - பாலிவுட் - ஹாலிவுட் என அசத்தி வரும் நடிகர் தனுஷ் அடுத்ததாக தற்போது பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

முன்னதாக ராக்கி மற்றும் சாணிக் காயிதம் படங்களின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இதனிடைய முதல் முறையாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தனுஷ் நடித்துள்ள வாத்தி (SIR) திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கியுள்ளார். 

சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணைந்து தயாரிக்கும் வாத்தி படத்தில் சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்க, சாய்குமார், தனிக்கெல்லா பரணி, கென் கருணாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். J.யுவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள வாத்தி திரைப்படத்திற்கு நவீன் நூலி படத்தொகுப்பு செய்ய, ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். 

அடுத்த ஆண்டு (2023) பிப்ரவரி 17ஆம் தேதி ரிலீஸாகும் என சமீபத்தில் அறிவித்தனர். இந்நிலையில் இசையமைப்பாளர் GV பிரகாஷ் குமார் வாத்தி திரைப்படத்தின் இரண்டாவது பாடலாக நாடோடி மன்னன் பாடலின் ரெக்கார்டிங் தற்போது நடைபெற்று வருவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். GV.பிரகாஷின் அந்த பதிவு இதோ…