இந்திய சினிமாவில் நட்சத்திர இயக்குனராக உயர்ந்திருக்கும் இயக்குனர் அட்லீ தன்னுடைய காதல் மனைவி பிரியாவின் பிறந்தநாளுக்கு தன்னுடைய அன்பு வாழ்த்துகளை பகிர்ந்து இருக்கிறார். தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் மனைவிக்கு அன்பு வாழ்த்துகளை பகிர்ந்த இயக்குனர் அட்லீ புகைப்படங்களையும் வெளியிட்டு இருக்கிறார். அந்தப் பதிவில்,

“இது உன் பிறந்த நாள், என் அன்பே! நான் ஒரு பெண்ணுக்காக பிரார்த்தனை செய்தேன், ஆனால் என்ன தெரியுமா? கடவுள் மிகவும் தாராளமானவர், அதற்கு பதிலாக அவர் எனக்கு ஒரு தேவதையைக் கொடுத்தார். அந்த தேவதை என் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றும்.
எனக்கு அனைத்தும் நீங்கள் தான். இப்போது, ​​எங்கள் குடும்பத்திற்கு ஒரு அழகான சிறிய சேர்க்கை உள்ளது, மீர். எங்கள் சொந்த நிஜ வாழ்க்கை கார்ட்டூன் சுஜி மம்மிக்கு உண்மையிலேயே அற்புதமான பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவிக்க தந்தை மற்றும் மகன் இருவரும் இங்கு வந்துள்ளோம். உன் வழியில் நிறைய அன்பை அனுப்புகிறேன், பிரியா அட்லீ!!!”

என குறிப்பிட்டு பதிவிட்டு இருக்கிறார். இயக்குனர் அட்லீயின் அழகான அந்த பதிவு மற்றும் வைரலாகும் புகைப்படங்கள் இதோ…

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனராக பணிபுரிந்த இயக்குனர் அட்லீ, ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். ஆர்யா - நயன்தாரா இணைந்து நடித்த ராஜா ராணி திரைப்படத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜயுடன் முதல் முறை கைகோர்த்த அடலீ இயக்கி தெறி படம் சூப்பர் ஹிட்டானது. தொடர்ந்து அடுத்தடுத்து மெர்சல் மற்றும் பிகில் என பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து, தளபதி விஜயை வைத்து ஹாட்ரிக் மெகா ஹிட் கொடுத்த அட்லீ தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர இயக்குனராக உயர்ந்தார். இதனை அடுத்து தற்போது ஜவான் திரைப்படத்தின் மூலம் முதல் முறையாக பாலிவுட் சினிமாவில் இயக்குனர் அட்லீ காலடி எடுத்து வைத்துள்ளார். தனது முதல் ஹிந்தி திரைப்படமாக இயக்குனர் அட்லீ இயக்கி இருக்கும் ஜவான் திரைப்படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக் கான் கதாநாயகனாக நடித்துள்ளார். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஜவான் திரைப்படத்தில் ஷாரூக் கானுக்கு வில்லனாக நடிக்க. நடிகை நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசான ஜவான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று 1150 கோடி ரூபாய் வரை வசூலித்து மாபெரும் பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து இயக்குனர் அட்லி இயக்கும் அடுத்த திரைப்படத்திற்காக ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களும் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர். சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய இயக்குனர் அட்லி, இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக விளங்கும் தளபதி விஜய் & ஷா ரூக் கான் இருவரும் இணைந்து நடிக்கும் படம் ஒன்றை திட்டமிட்டு வருவதாக தெரிவித்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. எனவே இயக்குனர் அட்லி தனது திரைப்பயணத்தில் 6வது திரைப்படமாக இயக்க இருக்கும் அடுத்த திரைப்படம் அனேகமாக அந்த படமாக தான் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.