தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவர் நடிகர் கார்த்தி. தனித்துவமான நடிப்பின் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த கார்த்தி தொடர்ந்து பல முக்கிய படங்களில் நடித்து வருகிறார். முன்னதாக மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான பொன்னியின் செல்வன் 1,2 திரைப்படங்களில் வந்திய தேவன் என்ற மிக முக்கியமான கதாபாத்திரத்தில் கார்த்தி நடித்திருந்தார். கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகம் தொடங்கி சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வரை கார்த்தி தற்போது திரையுலகில் ஹாட் டாப்பிக் காக இருந்து வருகிறார். இப்படத்திற்கு பின்பு அவரது மார்கெட் மற்றும் ரசிகர் கூட்டமும் அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

இந்நிலையில் கார்த்தியின் அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்து உள்ளது. அதன்படி தற்போது கார்த்தி நடித்து வரும் திரைப்படம் ‘ஜப்பான்’. ‘குக்கூ’, ‘ஜோக்கர்’, ‘ஜிப்ஸி’ படங்களை இயக்கிய ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படதின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் கார்த்தியின் அடுத்த புதிய படம் குறித்த அப்டேட்டினை பிரபல தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அவர்கள் நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் பகிர்ந்து கொண்டார். அதில் பேசிய அவர்,

“நம்ம தயாரிப்பில் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கிருக்கு.. அது இன்னும் டைட்டில் இன்னும் வெளியிடவில்லை.. படப்பிடிப்பு ஒரு 8 நாள் போயிருக்கு .. கார்த்தி சாருடைய பிறந்தநாளையடுத்து ஜப்பானுடைய அப்டேட் வெளியாகும். அதுலருந்து 1,2 மாதம் கழித்து நம்ம படங்களுடைய அறிவிப்பும் வெளியாகும்..படம் இப்போதான் தொடங்கிருக்கோம். ஆரம்பிக்கிறதுக்கு 2 மாதம் முன்னாடியே எல்லா ரைட்ஸ் ம் விற்கப்பட்டு விட்டது. கார்த்தி திரைப்பயணத்தில் அது அதிக விலை என்று சொல்லலாம். கார்த்தி சாருக்கு இதுவரை இருந்த வியாபாரத்தை இது தொட்டுவிடும்." என்றார்.

மேலும் பிரபல தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அவர்கள் நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் சூர்யா 42 வது திரைப்படமான ‘கங்குவா’ படம் குறித்தும் சியான் விக்ரமின் தங்கலான் படம் குறித்தும் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் கொண்ட முழு வீடியோ இதோ...