பிரபல நகைச்சுவை நடிகர் சூரி முதல் முறையாக கதையின் நாயகனாக நடித்து வெளியாகியிருக்கும் திரைப்படம் விடுதலை. இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் பீரியட் கிரைம் திரில்லர் திரைப்படமாக உருவாகியிருக்கும் இப்படத்தின் முதல் பாகம் நேற்று வெளியாகி ரசிகர்களின் ஆரவாரத்தை பெற்று மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அட்டகாசமாக உருவாகியுள்ள இப்படத்தில் கதையின் நாயகனாக சூரி நடிக்க இவருடன் முக்கியமான கதாபாத்திரத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ளார். மேலும் இவர்களுடன், இயக்குனர் கௌதம் மேனன், இய்க்குனரும் ஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனன், பிரகாஷ் ராஜ், சேத்தன், பவானி ஸ்ரீ மற்றும் பலர் நடித்துள்ளனர்.

நேற்று திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று மவெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கின்றது.இந்நிலையில் அப்படத்தில் முக்கியமான காட்சியில் விஜய் சேதுபதி மற்றும் இயக்குனர் வெற்றி மாறன் அவர்களுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து நமது கலாட்டா தமிழ் பேட்டியில் நடிகை தென்றல் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் இதோ..

"படப்பிடிப்பில் தான் விஜய் சேதுபதி சார் பார்த்தேன். நான் என்ன தென்றல் னு சொல்லி அறிமுக படுத்தினேன்.‌ அவர் நான் விஜய் சேதுபதி னு சொல்லி அறிமுகப்படுத்துனார். எனக்கு அப்போ என்ன வெளிபடுத்தனும்னு தெரியல..வெற்றி மாறன் சார், விஜய் சேதுபதி சார் அப்பறம் நான் மூன்று பேரும் பேசிக் கொண்டிருந்தோம்.‌ அந்த காட்சி குறித்து வெற்றி சார் எனக்கு சொல்லி கொடுத்திட்டு இருந்தார். அப்போ விஜய் சேதுபதி சார் என்னிடம் 'நீ பண்ணிடுவ மா.. உன் தன்னம்பிக்கை தெரியுது' என்றார்மேலும் வெற்றி சார் 'நீ பண்ணிடுவனு நம்புறேன்' என்றார். நான் இரண்டு பேர்கிட்டேயும் என்னுடைய முழு திறனையும் வெளிப்படுத்துகிறேன் என்று சொன்னேன். எனக்கு நான் பண்ணுவேன் என்ற நம்பிக்கை இருந்தது. ஏனென்றால் அவங்க எனக்கு அந்த தருணத்தை கொடுத்தார்கள். விஜய் சேதுபதி சார் ரொம்பவே எளிமையாக நட்பாக பழகி நல்ல உணர்வை கொடுத்தார். எனக்கு அவர் பெரிய ஸ்டார் னு தோனல.. அவர் என்னுடைய சக நடிகராக மட்டும் தான் எனக்கு அவர் தெரிஞ்சார். அதனால் தான் அந்த காட்சியை செய்து முடிக்க முடிந்தது.” என்றார் நடிகை தென்றல்.

மேலும் விடுதலை பட நடிகை தென்றல் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் கொண்ட முழு வீடியோ இதோ..