நெருக்கமாக நடித்தால் தவறாக மதிப்பிடுகிறார்கள்!- INTIMACY காட்சிகள் பற்றி பொன்னியின் செல்வன் நாயகி சோபிதாவின் பளிச் பதில்! வைரல் வீடியோ

நெருக்கமான காட்சிகள் பற்றி சோபிதா துலிபலாவின் பளிச் பதில்,ponniyin selvan actress sobhita dhulipala about intimacy scenes | Galatta

ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் இயக்குனர் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி தயாராகி இருக்கும் இந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, சோபிதா துலிபலா, பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு, சரத்குமார், பார்த்திபன், கிஷோர், ஐஸ்வர்ய லெக்ஷ்மி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதனிடையே பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை சோபிதா துலிபலா நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் பல முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டார். 

அந்த வகையில் அவரிடம் நெருக்கமான காட்சிகளில் நடிப்பது குறித்தும் அந்த காட்சிகளில் நடிப்பதால் நீங்கள் எதிர்கொண்ட மோசமான அனுபவம் மற்றும் இது குறித்து நீங்கள் சொல்ல வேண்டிய விஷயங்கள் ஏதாவது இருந்தால் பகிர்ந்து கொள்ள முடியுமா? ஏனென்றால் ஹாலிவுட்டில் இது மாதிரியான காட்சிகளுக்கு வழி நடத்துவதற்கு என்று சிலர் இருக்கிறார்கள்... ஆனால் தென்னிந்திய சினிமாவில், தமிழ் சினிமாவிலோ பாலிவுட்லோ அப்படி எதுவும் இல்லை இது பற்றி ஏதாவது பேச விரும்புகிறீர்களா? என கேட்டபோது, 

“தற்போது பாலிவுட்டில் அதற்கான பயிற்சிகள் தொடங்கப்பட்டிருக்கிறது. ஆனால் நான் என்னுடைய அனுபவத்தை சொல்கிறேன். நான் சினிமா துறையோடு தொடர்பு கொண்டவள் அல்ல. நான் வெளியாள் தான். நான் மிஸ் இந்தியா வென்றிருக்கிறேன். மாடலிங் துறையில் இருந்திருக்கிறேன். பின்னர் நடிக்க வந்தேன். என்னுடைய முதல் படம் அனுராக் கஷ்யப் சார் உடன். என்னைப் பொறுத்தவரை சினிமா பற்றிய புரிதல் என்னவென்றால் நாம் நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு மிக நியாயமாக இருக்க வேண்டும். அப்படி அந்த கதாபாத்திரத்தின் பயணத்தில் ஒரு காட்சி ஒருவரை காதலிப்பது போலவோ ஒருவருக்கு முத்தம் கொடுப்பது போலவோ இருந்தால் அதை வைத்து நான் எதையும் மதிப்பிட மாட்டேன். ஆனால் நான் அது மாதிரியான இரண்டு நெருக்கமான காட்சிகளில் நடித்த போது, மக்கள் என்னை இப்படிப்பட்ட காட்சியில் நடிக்கிறாள். இவள் மிக தைரியமானவள். இவள் இதற்கெல்லாம் மிகவும் சகஜமானவள் என மதிப்பிட்டார்கள். எனக்கு தெரிந்து யாருமே இது மாதிரியான காட்சிகளில் நடிக்க சகஜமானவர்கள் அல்ல. இது மாதிரியான நெருக்கமான காட்சியை ஆயிரம் நபர்களுக்கு முன்பு செய்வதற்கு.. ஆனால் நாங்கள் செய்கிறோம். எங்களது வேலையை நாங்கள் மதிக்கிறோம். ஏனென்றால் எங்களுக்கு புரியும் இது ஒரு தனிப்பட்ட ரொமான்ஸ் கிடையாது. இது திட்டமிட்டு செய்யும் ஒரு நிகழ்வு. உண்மையில் இப்படியான காட்சிகள் நடிக்கும் போது ஒருவருக்கொருவர் உள்ளுக்குள் அந்த உணர்வு கூட இருக்காது. ஒரு ரோபோ செய்யும் நிகழ்வு போன்றது. இதை தவறாக மதிப்படுகிறார்கள் அவர்களுக்கு தெரியாது திரைக்குப் பின்னால் நிஜமாக என்ன நடக்கிறது என்று... இது அவ்வளவு எளிமையான விஷயம் கிடையாது. ஆனால் நான் செய்தேன். காரணம் என்னுடைய பயணத்தில் எனக்கு கிடைத்த அந்த வாய்ப்புகளை இது மாதிரியான காரணத்திற்காக விட விரும்பவில்லை. ஏனென்றால் அந்தப் படத்தின் இயக்குனர்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது.” என நடிகை சோபிதா துலிபலா தெரிவித்துள்ளார். அந்த முழு பேட்டி இதோ…
 

பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரம் அதிகம் இடம்பெறாதது ஏன்? மனம் திறந்த சோபிதா துலிபலாவின் பதில் இதோ!
சினிமா

பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரம் அதிகம் இடம்பெறாதது ஏன்? மனம் திறந்த சோபிதா துலிபலாவின் பதில் இதோ!

'த்ரிஷாவை இப்படி தான் கூப்பிடுவேன்!'- பொன்னியின் செல்வனில் பணியாற்றிய சுவாரஸ்யங்கள் பகிர்ந்த சோபிதா துலிபலா! வைரல் வீடியோ
சினிமா

'த்ரிஷாவை இப்படி தான் கூப்பிடுவேன்!'- பொன்னியின் செல்வனில் பணியாற்றிய சுவாரஸ்யங்கள் பகிர்ந்த சோபிதா துலிபலா! வைரல் வீடியோ

தளபதி விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம்ம ட்ரீட்... லியோ படத்தின் அடுத்த மாஸ் அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்! விவரம் உள்ளே
சினிமா

தளபதி விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம்ம ட்ரீட்... லியோ படத்தின் அடுத்த மாஸ் அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்! விவரம் உள்ளே