வளர்ந்து வரும் இளம் நடிகர் என்ற பட்டியலில் இருந்து ப்ளாக் பஸ்டர் தரும் நடிகர் என்று உச்சம் பெற்றவர் நடிகர் சிவகார்த்திகேயன். ஆரம்ப காலக்கட்டத்தில் தொலைக்காட்சியில் பணியாற்றி பின் 2012 ஆண்டில் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்த சிவகார்த்திகேயன். அவரது நடிப்பு மற்றும் நகைச்சுவைக்காகவே ரசிகர் கூட்டம் உருவாகியது. மேலும் உழைத்து நடிப்பு, நடனம் என்று பல திறன்களை மேம்படுத்தி ஜனரஞ்சகமான கதாநாயகனாக உருவெடுத்தார். திரைக்கு வந்து சில ஆண்டுகளிலே ப்ளாக் பஸ்டர் வசூல் அடிக்க தொடங்கினார் சிவகார்த்திகேயன். பின் தொடர்ந்து வெற்றி படங்களையே கொடுத்து தற்போது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய கதாநாயகன் பட்டியலில் சிவகார்த்திகேயன் இணைந்துள்ளார்.
குறிப்பாக இவரது முந்தைய படங்களான ‘டாக்டர்’, ‘டான்’ திரைப்படங்களின் வெற்றியில் திரையுலகம் சிவகார்த்திகேயனை ஆச்சரியத்தில் பார்த்தது. தற்போது சிவகார்த்திகேயன் அயலான், மாவீரன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பு மட்டுமல்லாமல் திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார் சிவகார்த்திகேயன். மேலும் பாடலாசிரியராகவும் தமிழ் சினிமாவாக வலம் வருகிறார் சிவகார்த்திகேயன். இவர் எழுதிய பாடலோ அல்லது நடித்த பாடலோ இணையத்தில் வைரலாகி அதிக சாதனை பெறுவது வழக்கம். குறிப்பாக விஜய் நடித்து கடந்த ஆண்டு வெளிவந்த ‘பீஸ்ட்’ திரைப்படத்தில் இடம்பெற்ற 'அரபிக் குத்து' பாடலை சிவகார்த்திகேயன் எழுதியிருந்தார். இந்த பாடல் தற்போது இணையத்தில் 500 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது.
பொதுவாகவே சிவகார்த்திகேயன் சமூக ஊடகங்களில் ஈடுபாடுடன் இருப்பவர். புகைப்படங்கள் பதிவிடுவது வாடிக்கையாக வைத்திருப்பவர். இந்நிலையில் சிவகார்த்திகேயன் கடந்த பொங்கல் திருநாளில் தனது குடும்பத்துடன் பொங்கல் விழாவை கொண்டாடினார். குடும்பத்தோடு இருக்தும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார் சிவகார்த்திகேயன்.