நான்கரை வயது சிறுமிக்கு, 24 வயது இளைஞர் பாலியல் தொந்தரவு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த கட்டிமேடு கிராமத்தைச் சேர்ந்த 24 வயதான தினேஷ்குமார், அங்குள்ள மெடிக்கல் ஒன்றில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், இவரின் வீட்டின் அருகில் விளையாடிக்கொண்டிருந்த நான்கரை வயது சிறுமியிடம், அப்படி எதைக் கண்டு காம வயப்பட்டோரோ தெரியவில்லை.

சிறுமியிடம் சென்று, ஆசை வார்த்தைகள் கூறியும், சாக்லெட் வாங்கித் தருவதாகவும் கூறி, சிறுமியை அங்குள்ள மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இதனையடுத்து, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யும் முயற்சியில், பாலியல் ரீதியாகச் சித்ரவதை செய்துள்ளார்.

இதனிடையே, சிறுமியைக் காணாமல் தேடிவந்த அவரது தாயர், தினேஷ்குமார் தன் மகளை ஏதேதோ செய்வதைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதனையடுத்து, சிறுமியின் தயாரைப் பார்த்ததும், தினேஷ்குமார் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். பின்னர், தினேஷ்குமாரை திட்டியபடியே, சிறுமியிடம் நடந்தது பற்றி விசாரித்துள்ளார்.

சிறுமியும் அழுதுகொண்டே, தனக்கு நேர்ந்த பாலியல் சித்ரவதை குறித்துக் கூறவே, உடனடியாக அருகில் உள்ள திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தினேஷ்குமாரை கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், பாலியல் சித்ரவதைக்கு உள்ளான சிறுமியை மீட்டு, அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்குச் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.