சீமான் குடித்தால் என்ன செய்வார் தெரியுமா? என்று நடிகை விஜயலெட்சுமி பேசி வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, நடிகை விஜயலெட்சுமி தொடர்ந்து அவதூறுகளைப் பரப்பி வருகிறார். ஆனால், இதற்கெல்லாம் சீமான் ஒருபோதும் பதில் அளித்தது இல்லை. இதை ஒரு பொருட்டாக அவர் கருதியதுமில்லை.

இந்நிலையில், சீமான் மீது நடிகை விஜயலெட்சுமி மீண்டும் பகிரங்கமான ஒரு குற்றச்சாட்டை சுமத்தி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

இது தொடர்பாக நடிகை விஜயலெட்சுமி பேசி உள்ள வீடியோவில், என் கேள்விக்குப் பதில் சொல்வதைக் கூட, கேவலமாகக் கருதும் சீமான், எனக்குப் போதையில் தீராத தொல்லை கொடுத்திருக்கிறார்” என்று பகிரங்கமாகவே குற்றம்சாட்டி உள்ளார்.

மேலும், “சீமான் பார்ப்பதற்கு நல்லவராகத் தெரிந்தாலும், அவர் குடிப்பார் என்பது பலருக்கும் தெரியாது என்றும், அவர் குடித்துவிட்டு, என்னைப் பலமுறை டார்ச்சர் செய்திருக்கிறார்” என்றும் குற்றம்சாட்டி உள்ளார்.

குறிப்பாக, “என்னை ஏமாற்றியது தொடர்பாகச் சீமான் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அதுவரை, என்னுடைய நியாயம் கேட்கும் போராட்டம் தொடரும்” என்றும் நடிகை விஜயலெட்சுமி உருவாக்கமாகப் பேசி உள்ளார்.

அத்துடன், “சீமான் குறித்து நான் பேசியது தொடர்பாகக் கனடாவிலிருந்து நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ஒருவர் என்னைத் தொடர்ந்து மிரட்டினார்” என்றும் விஜயலெட்சுமி குற்றம்சாட்டினார்.

இதனிடையே, நடிகை விஜயலெட்சுமி சீமான் தொடர்பாகப் பேசியுள்ள வீடியோ, இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.