திருமணம் செய்து கொள்வதாக கூறி 2 பெண்களை உல்லாசம் அனுபவித்த போலீஸ்காரர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம் மாவட்டம் காணை கிராமத்தைச் சேர்ந்த 27 வயதான சரத்குமார், கடந்த 2011 ஆம் ஆண்டு, அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் போது, தன்னுடன் படித்த ராஜலட்சுமி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

இருவரும் நெருங்கிக் காதலித்த வந்த நிலையில், இருவரும் பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரி காலத்திலும், தற்போது படிப்பை முடித்து வேலைக்குச் செல்லும் போதும், இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

இருவரும் நீண்ட நாள் காதலர்கள் என்பதால், அந்த பெண்ணும், சரத்குமாரை முழுமையாக நம்பி, தன்னையே முழுமையாக ஒப்படைத்துள்ளார். இதனால், இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர்.

இதனிடையே, சரத்குமார் தற்போது விழுப்புரம் ரயில்வே காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வரும் நிலையில், அங்கு தன்னுடன் பெண் காவலராக பணியாற்றி வரும் 27 வயதான பிரியங்கா என்ற பெண்ணை காதலித்துள்ளார்.

மேலும், திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி, சரத்குமார் பிரியங்காவை உல்லாசம் அனுபவித்து வந்ததாகத் தெரிகிறது.

இதனைத்தொடர்ந்து, தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி ராஜலட்சுமி, சரத்குமாரை தொந்தரவு செய்து வந்துள்ளார். இந்த தகவலைக் கேள்விப்பட்ட பிரியங்கா, ராஜலட்சுமிக்கு போன் மூலம் மிரட்டல் விடுத்துள்ளார். அத்துடன், “சரத்குமாரை நான் காதலிப்பதாகவும், நாங்கள் இருவரும் தான் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும்” கூறி கடுமையாக எச்சரித்துள்ளார்.

இதனிடையே சரத்குமார், ராஜலட்சுமியை திடீரென்று கோயிலுக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்துகொண்டார்.

இதைக் கேள்விப்பட்டு கடும் அதிர்ச்சியடைந்த பிரியங்கா, விழுப்புரம் மகளிர் காவல் நிலையத்தில் சரத்குமார் மீது பாலியல் புகார் அளித்தார்.

புகாரில், “திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி சரத்குமார் என்னை உல்லாசம் அனுபவித்தார் என்றும், இதனால், 4 முறை கர்ப்பமடைந்து சரத்குமாரின் வற்புறுத்தலின் பேரில், கருக்கலைப்பு செய்துள்ளேன் என்றும் குற்றம்சாட்டி உள்ளார்.

அத்துடன், தற்போது 7 மாதம் கர்ப்பமாக உள்ள நிலையில் சரத்குமார், என்னை ஏமாற்றி விட்டு ராஜலட்சுமியை திருமணம் செய்துள்ளார் என்றும், இது தொடர்பாகக் கேட்டதற்கு தனக்குக் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், போலீஸ் சரத்குமாரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதனிடையே, பொதுமக்களுக்குப் பாதுகாப்பு தர வேண்டிய போலீசார் ஒருவரே, சக பெண் போலீசாரிடமே திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி, உல்லாசம் அனுபவித்து ஏமாற்றிய சம்பவம் விழுப்புரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.