மூன்று ஆண்டுகளுக்கு பிறகு கார் ரேஸில் மீண்டும் எம்ஆர்எப் மற்றும் ஜெஏ மோட்டார் ஸ்போர்ட்ஸ் நடத்தும் ஃபார்முலா போர் பந்தயத்தில் பங்கேற்கவிருக்கிறார் நடிகர் ஜெய்.

நடிகர் ஜெய் மோட்டார் ஸ்போர்ட்ஸ் மீது அதிக ஆர்வம் கொண்டவர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். நடிகர் ஜெய் தொடர்ந்து கார் சேகரிப்பில் ஈடுபட்டு வருவதும் மோட்டார் ஸ்போர்ட் மீதான அவருடைய ஆர்வமும் தொடர்ந்து தலைப்பு செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில் கார் ரேசில் பங்கேற்று வரும் நடிகர் ஜெய் தற்போது 3 ஆண்டுகளுக்குப் பின்னர் எம்ஆர்எப் மற்றும் ஜெஏ மோட்டார் ஸ்போர்ட்ஸ் நடத்தும் ஃபார்முலா போர் பந்தயத்தில் பங்கேற்கவிருக்கிறார்.

மூன்று நாட்கள் போட்டியாக இந்த பந்தயம் நடைபெற உள்ளது. மேலும் இந்த போட்டியில் ஜெய் உடைய கார் நம்பர் 6. இந்த ரேஸ் பந்தய போட்டிகள் டிசம்பர் மாதம் 10-ம் தேதி தொடங்குகிறது. இதையடுத்து 11-ம் தேதி தகுதி சுற்றும் 12-ம் தேதி அன்றும் நடைபெறுகிறது. பொதுவாக இந்தியா முழுவதும் சென்னை, கோயம்புத்தூர் மற்றும் டெல்லி ஆகிய 3 இடங்களில் மட்டுமே போட்டிகள் நடக்கும். இந்த வருடம் போட்டி சென்னை மைதானத்தில் நடக்கவிருப்பதால் சென்னையில் உள்ளவர்கள் மெய்சிலிர்க்க கூடிய அளவிற்கு அனுபவத்தை ஏற்படுத்தும். மேலும் நடிகர் ஜெய் மூன்று வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் கார் பந்தயத்தில் களமிறங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனைத்தொடர்ந்து இந்த போட்டியில் நடிகர் ஜெய்க்கு எண்ணித்துணிக திரைப்படக் குழு ஸ்பான்சர் செய்கிறது. பொதுவாக அவருக்கு வருண் மணியன் நிறுவனம் ஸ்பான்சர் செய்து வருகிறது. திரை வல்லுநர்கள் திரைத்துறையுடன் மட்டும் நிற்காமல் ஜெய் மீது நம்பிக்கை வைத்து அவருக்கு ஸ்பான்சர் செய்வதும், மோட்டார் ஸ்போர்ட்ஸ் மீது ஆர்வம் காட்டுவதும் ஒரு அழகான தருணமாக உள்ளது.

மேலும் 2021-ம் ஆண்டு நடிகர் ஜெய்க்கு மிகவும் முக்கியமான ஒரு வருடமாக அமைந்துள்ளது. ஏனென்றால் அவர் நடித்து வரும் திரைப்படங்கள் அவரின் நடிப்பில் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர் திரைத்துறையில் இசையமைப்பாளராக அறிமுகமாவது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து ஜெய் தற்போது விளையாட்டுவீரர் அவதாரம் அவருக்கு இன்னொரு மகுடமாக அமைந்துள்ளது. இதனால் ஜெய் ரசிகர்களுக்கு பெரும் குஷியில் உள்ளனர்.