கல்லூரி காலத்தில் ஏற்பட்ட 4 வருட காதலை மறக்க முடியாமல் பெண் ஒருவர் ஆணாக மாறி, காதலியை கரம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல்லைச் சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவி பவித்ராவும், ஈரோட்டைச் சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவி விஷ்ணு பிரியாவும், கல்லூரியில் ஒன்றாகப் படிக்கும் போதே நல்லா தோழிகளாக இருந்துள்ளனர்.

இந்த நட்பு, பின்பு காதலாக மாறியுள்ளது. இதனால், ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். பின்னர், காதலை மறக்கவும் முடியாமல், ஒருவரை ஒருவர் பிரியவும் மனம் இல்லாமல், இருவரும் கூடி பேசி உள்ளனர்.

அதன்படி, விஷ்ணு பிரியா ஆணாக மாறி, பவித்ராவை திருமணம் செய்ய முடிவு செய்தார்.
அதன்படியே, விஷ்ணு பிரியா அறுவை சிகிச்சை மூலம் ஆணாக மாறி, தன் பெயரை விஷ்வந்த் என்று பெயர் மாற்றிக்கொண்டார்.

இந்நிலையில், இருவரும் திருமணம் செய்துகொள்வதற்காக, மாலையும் கழுத்துமாக, மதுரை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவிற்கு வருகை தந்து, தங்களுக்குத் திருமணம் செய்து வைக்குமாறும், தங்களுக்குத் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் மனு அளித்தனர்.

அதன்படி, அவர்கள் வழக்கறிஞர் மோகன்தாஸ் முன்னிலையில் மாலை மாற்றி திருமணம் செய்துகொண்டனர்.

இதனிடையே, ஆணாக மாறிய பெண்ணுக்கும், மற்றொரு பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்ற சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.