சென்னை அடுக்குமாடிக் குடியிருப்பில் சலிக்க சலிக்க விபச்சாரத்தில் ஈடுபட்ட 3 இளம் பெண்கள் மீட்கப்பட்டனர்.

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே உள்ள மன்னூர்ப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில், விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, அங்கு விரைந்து சென்ற போலீசார், குறிப்பிட்ட ஒரு அடுக்குமாடி வீட்டின் உள்ளே சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, அந்த வீட்டில் 3 இளம் பெண்கள் மாறி மாறி தொடர்ந்து உல்லாசத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதனையடுத்து, அவர்களை மீட்ட போலீசார், அவர்கள் 3 பேரும் பெங்களூரைச் சேர்ந்தவர்கள் என்பதை கண்டுபிடித்தனர்.

மேலும், இந்த பெண்களிடம் ஆசைவார்த்தைகள் கூறி, சென்னை அழைத்து வந்து உல்லாசத்தில் ஈடுபடுத்திய பிரபாகரன் மற்றும் மருதுராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இதனையடுத்து, அவர்களிடம் விசாரணை நடத்திய நிலையில், அவர்கள் இருவரும் சென்னை புழல் சிறையில் அடைத்தனர். அத்துடன், மீட்கப்பட்ட வெளிமாநில இளம் பெண்கள் 3 பேரும், அருகில் உள்ள பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சென்னையில் கடந்த சில வருடங்களாக விபச்சாரம் தொடர்பான வழக்குள் இல்லாமல் இருந்த நிலையில், தற்போது மீண்டும் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.