துப்பாக்கிச் சுடுதலில் தமிழக வீராங்கனை இளவேனில் தங்கப்பதக்கம் வென்று சாதனைப்படைத்தார்.  

சீனாவில் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் கலந்துகொண்டு வருகின்றன.

Elavenil Valarivan

இந்த போட்டியில், இந்தியா சார்பில் இளவேனில் வாலறிவான், பெண்களுக்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் கலந்துகொண்டார்.

அதன்படி, துப்பாக்கிச் சுடுதலில் கால் இறுதி, அரையிறுதி போட்டியில் முன்னேறிய இளவேனில் வாலறிவான், இன்று இறுதிப்போட்டியில் கலந்துகொண்டார். 

Elavenil Valarivan

இதில், 250.8 புள்ளிகள் பெற்று இளவேனில் வாலறிவான், தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். இதன் மூலம் இந்தியா, 3 வது தங்கப்பதக்கம் வென்றுள்ளது. இதனால்,  இளவேனில் வாலறிவானுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Elavenil Valarivan

இதனிடையே, இதற்கு முன்பு பிரேசிலில் நடைபெற்ற சர்வதேசத் துப்பாக்கிச் சுடுதல் உலக கோப்பை போட்டியில், இளவேனில் வாலறிவான் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.