இணையத்தில் மனைவியின் ஆபாச வீடியோவைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கணவன், விவாகரத்து கேட்டு நீதிமன்றம் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொல்கத்தாவைச் சேர்ந்த 32 வயதான பெண் மருத்துவர் ஒருவர், பெங்களூருவில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு இணையதளம் மூலம் திருமண தகவல் மையத்தில் பதிவு செய்து, உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த என்ஜினீயரை திருமணம் செய்துகொண்டார்.

இதனையடுத்து, திருமணத்திற்கு முன்பு தான் ஒருவரைக் காதலித்ததாகவும், ஆனால், அவர் வேற ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டதாகவும் கணவரிடம் கூறி உள்ளார். கணவரும் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

திருமணத்திற்குப் பிறகு, செக்ஸில் ஈடுபடும் போதெல்லாம், ஆபாச வீடியோக்களை பார்க்கும்படி, தன் கணவரை அந்த பெண் மருத்துவர் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.

அத்துடன், ஆபாச வீடியோக்களில் வருவது போன்று, தன்னிடம் தாம்பத்தியத்தில் ஈடுபட வேண்டும் என்றும் அந்த பெண் மருத்துவர், கணவரை வற்புறுத்தி வந்துள்ளார்.

இதிலெல்லாம் துளியும் ஆர்வம் இல்லாத கணவர், மனைவிக்காக எல்லாவற்றையும் வெறுத்துபோய் உள்ளார்.

இதனிடையே, மனைவியின் செல்போனில், அவருடைய ஆபாசப் படம் இருந்துள்ளதைப் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். அதில், மனைவியுடன் அவருடைய முன்னாள் காதலன் இருந்துள்ளார்.

இதனைப் பார்த்த மனைவி, “வீடியோவில் இருப்பவர் தன்னுடைய முன்னாள் காதலன் என்றும், இருவரும் காதலித்த நேரத்தில் உல்லாசமாக இருந்தபோது, வீடியோவை எடுத்ததாகவும், ஒருவேளை காதலன் தன்னை மிரட்டினால், அவனிடமிருந்து தப்பித்துக்கொள்வதற்காக, இந்த வீடியோவை நான் பத்திரமாக வைத்திருந்ததாகவும்” விளக்கம் அளித்துள்ளார்.

கணவனும், மனைவியின் விளக்கத்தை வேறு வழியில்லாமல் ஏற்றுக்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து, மனைவி எப்போதும் போல கணவரை ஆபாச வீடியோ பார்க்கச் சொல்லி தொந்தரவு செய்துள்ளார். அப்போது, கணவன் ஆபாச வீடியோ பார்த்துள்ளார். அந்த நேரத்தில் மனைவி இருக்கும் ஆபாசப் படமும் அதில் வந்துள்ளது. அந்த வீடியோவில், முன்னாள் காதலன் இல்லாத வேறு ஒரு ஆணிடம், மனைவி உல்லாசத்தில் இருந்துள்ளார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அவர், மனைவியிடம் கேட்டதற்கு, “திருமணத்திற்கு முன்பு, நான் சிலருடன் உல்லாசத்தில் இருந்தேன். ஆனால், அந்த வீடியோ எப்படி இணையத்தில் வந்தது என்று தெரியவில்லை என்று இயல்பாகக் கூறியுள்ளார். இதனால், கடும் கோபடைந்த கணவன், விவாகரத்து கேட்டு நீதிமன்றம் சென்றார்.

பின்னர், கணவரை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று கோரி, பெண் மருத்துவர்.. கமிஷனர் அலுவலகத்தில் செயல்படும் குடும்பநல ஆலோசனை மையத்திற்குச் சென்றார்.

இதனையடுத்து, மூத்த ஆலோசகர் சரஸ்வதி, கணவன் - மனைவி இருவரையும் அழைத்துப் பேசினார். அப்போது, பழைய விசயங்களை மறந்து, கணவருடன் புதிய வாழ்க்கை வாழ விரும்புவதாகப் பெண் மருத்துவர் கூறியுள்ளார். ஆனால், கணவர் இதற்குச் சம்மதிக்காமல், விவகாரத்து கேட்டு விடாப்பிடியாக இருக்கிறார். இதனையடுத்து, இருவருக்கும் சிறிது காலம் யோசித்து விட்டு, மீண்டும் வந்து, தங்களது முடிவுகளைக் கூற வேண்டும் என்று கூறி, ஆலோசனைகளும் வழங்கி, ஆலோசகர் சரஸ்வதி, அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.