திருப்பூரில் பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் பாலத்திலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள  மேம்பாலத்தில், இளைஞர் ஒருவர் ஏறி நின்றுள்ளார். சுமார் 15 நிமிடங்களுக்கு மேலாக மேம்பாலத்தில் நின்றுகொண்டிருந்த அவர், திடீரென்று தற்கொலை செய்யும் நோக்கில் கீழே குதித்தார்.

jumps off bridge

அவர் கீழே குதிக்கும்போது, அந்த வழியாகப் பேருந்து சென்றால், எதிர்பாராதா விதமாகப் பேருந்தின் கடைசி பகுதியில் விழுந்தார். இதனையடுத்து, அடுத்த சில விநாடிகளில், அவர் அங்கிருந்து உருண்டு சாலையில் விழுந்தார். 

அவர் கீழே விழுந்ததைப் பார்த்த, அந்த வழியாகச் சென்றவர்கள் ஓடிச் சென்று, அந்த இளைஞரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். 

jumps off bridge

இதனிடையே, அந்த இளைஞர் மேம்பாலத்தில் நின்றது முதல், கீழே குதித்தது வரை அதை வீடியோவாக எடுத்தவர்கள் கூறும்போது, அந்த இளைஞர் போதையிலிருந்ததாக தெரிவித்தனர். மேலும், அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் காணப்பட்டதாகவும் பொதுமக்கள் குறிப்பிட்டனர்.

jumps off bridge

இதனையடுத்து, விரைந்து வந்த போலீசார், மேம்பாலத்திலிருந்து கீழே குதித்துக் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.