காதலிக்க மறுத்த மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த நடுவக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன், அதே ஊரில் உள்ள பள்ளியில் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார். 

girl love failure

ஒருதலை காதலால், அந்த பெண் செல்லும் இடமெல்லாம் பின் தொடர்ந்தே சென்ற பாலமுருகன், அந்த பெண்ணை தொடர்ந்து காதல் டார்ச்சர் செய்துள்ளார். காதலை ஏற்க மறுத்த அந்த பள்ளி மாணவி, இது எதைப் பற்றியும் கண்டுகொள்ளாமல், படிப்பிலேயே கவனம் செலுத்தி வந்துள்ளார். 

இதனையடுத்து பள்ளி முடிந்து மாலையில் வீடு திரும்பிய மாணவியைப் பின்தொடர்ந்து சென்ற பாலமுருகன், ரோட்டிலேயே மாணவி மீது பெட்ரோல் ஊற்றி கண் இமைக்கும் நேரத்தில் தீ வைத்து எரித்துள்ளார். இதில், சம்பவ இடத்திலேயே, மாணவி உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.

girl love failure

கடந்த 2018 ஆம் ஆண்டு நடை பெற்ற இச்சம்பவம் தமிழ்நாட்டையே அதிர வைத்தது. இது தொடர்பாகப் பாலமுருகன் கைது செய்யப்பட்டு, மதுரை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.  இது தொடர்பான வழக்கு நடைபெற்று வந்த நிலையில், கொலைக் குற்றவாளி பாலமுருகனுக்கு ஆயுள் தண்டனையையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதனைத்தொடர்ந்து, பாலமுருகன் சிறையில் அடைக்கப்பட்டார்.