அமீரின் பருத்திவீரன்: ‘இந்த சீனெல்லாம் இங்க செல்லாது’- வருத்தம் தெரிவித்த KEஞானவேல் ராஜாவின் அறிக்கைக்கு சசிகுமார் & சமுத்திரக்கனி பதிலடி!

அமீரின் பருத்திவீரன் KEஞானவேல் ராஜாவிற்கு சசிகுமார் சமுத்திரக்கனி பதிலடி,Sasikumar samuthirakani supports ameer on ke gnanavel raja | Galatta

தொடர்ந்து பரபரப்பாக பேசப்பட்டு வரும் பருத்திவீரன் திரைப்படத்தின் விவகாரம் தொடர்பாக இயக்குனர் அமீர் குறித்து மிகவும் கடுமையாக விமர்சித்து சமூக ஊடகங்களில் பேட்டி கொடுத்த தயாரிப்பாளர் KE.ஞானவேல் ராஜா அப்படி பேசியதற்காக வருத்தம் தெரிவித்து நேற்று நவம்பர் 29ஆம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்தார். இதனை அடுத்து இந்த வருத்தம் தெரிவித்த அறிக்கை போலியானது என்றும் அவர் பேசிய பேச்சுக்கு இந்த அறிக்கை ஈடில்லை என்றும் இயக்குனர்கள் சமுத்திரக்கனி மற்றும் சசிகுமார் ஆகியோர் தங்களது பதில் அறிக்கைகளை தற்போது வெளியிட்டிருக்கின்றனர். அந்த வகையில் இன்று நவம்பர் 30ஆம் தேதி இயக்குனர் சமுத்திரகனி அவர்கள் மிகவும் கடுமையாக தயாரிப்பாளர் KE.ஞானவேல் ராஜாவின் அறிக்கையை விமர்சித்து தனது அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். அந்த அறிக்கையில்,

பிரதர்... இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது...
நீங்க செய்ய வேண்டியது.,
எந்த பொதுவெளியில எகத்தாளமா உக்காந்து கிட்டு அருவருப்பான உடல் மொழியால சேற்ற வாரி இறைச்சீங்களோ... அதே பொது வெளியில பகிரங்கமா மன்னிப்பு கேக்கணும்..!
நீங்க கொடுத்த அந்த கேவலமான, தரங்கெட்ட இன்டெர்வியூ-வை சமூக வலைதளங்களில் இருந்து துடைச்சு தூர எறியணும்...!
அன்னைக்கு கொடுக்காம ஏமாத்திட்டுப் போன பணத்தை ஒத்த பைசா பாக்கி இல்லாம திருப்பிக் கொடுக்கணும். ஏன்னா... கடனா வாங்குன நிறைய பேருக்கு திருப்பிக் கொடுக்க வேண்டியது இருக்கு...
அப்புறம் "பருத்திவீரன்" திரைப்படத்தில வேலை பார்த்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பல பேருக்கு இன்னும் சம்பள பாக்கி இருக்கு. பாவம்...அவங்கெல்லாம் எளிமையான குடும்பத்துல இருந்து வந்து வேல பாத்தவங்க... நீங்கதான், "அம்பானி பேமிலியாச்சே..!"
காலம் கடந்த நீதி..! மறுக்கப்பட்ட நீதி..!

 
என்று தெரிவித்துள்ளார். அந்த அறிக்கை இதோ…


அறம் வெல்லும்… வெல்வோம் pic.twitter.com/0NiNIomJTx

— P.samuthirakani (@thondankani) November 30, 2023

முன்னதாக நேற்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அவர்கள் அறிக்கை வெளியிட்ட உடனே இயக்குனர் சசிகுமார் அவர்கள் சில கேள்விகளை எழுப்பி தன்னுடைய அறிக்கையை வெளியிட்டு இருந்தார் அந்த அறிக்கையில்,
போலியான வருத்தத்திற்கு
உண்மையைப் பலி கொடுக்க முடியாது.
அமீர் அண்ணன் ஞானவேல் ராஜா மீது சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்ன?
‘நான் பயன்படுத்திய சில
வார்த்தைகள்
புண்படுத்தி இருந்தால்...' என்று குறிப்பிட்டுச் சொல்கிறார் ஞானவேல் ராஜா. அப்படியெனில் அந்த சில வார்த்தைகள்' என்ன?
திட்டமிட்டு ஒருவரை அவமானப்படுத்திவிட்டு அவருக்கு அவரே வருந்துவது என்னமாதிரியான வருத்தம்?
இதன்மூலம் அமீர் அண்ணனுக்கு ஞானவேல் ராஜா சொல்ல வருவது என்ன?
பெயரிடப்படாத அந்தக் கடிதம் யாருக்கு?
சசிகுமார்

என்று தெரிவித்துள்ளார். அந்த அறிக்கை இதோ…

 

 

#Ameer #Paruthiveeran #Gnanavelraja pic.twitter.com/VuzqC8Cuvq

— M.Sasikumar (@SasikumarDir) November 29, 2023

ஒட்டுமொத்த திரையுலகையும் சமூக வலைதளங்களையும் திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில் இயக்குனர் அமீர் குறித்து மிகவும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து பேசியதற்காக தயாரிப்பாளர் KE.ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவித்து வெளியிட்ட அறிக்கையில், 

'பருத்தி வீரன்' பிரச்சனை கடந்த 17 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. நான் இது நாள் வரை அதை பற்றி பேசியது இல்லை. என்றைக்குமே "அமீர் அண்ணா” என்றுதான் நான் அவரை குறிப்பிடுவேன். ஆரம்பத்திலிருந்தே அவர் குடும்பத்தாருடன் நெருங்கிப்பழகியவன். அவரது சமீபத்திய பேட்டிகளில் என் மீது அவர் சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தியது. அதற்கு பதில் அளிக்கும் போது நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அவர் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வாழவைக்கும் சினிமா துறையையும் அதில் பணிபுரியும் அனைவரையும் மிகவும் மதிப்பவன் நான். நன்றி!
அன்புடன்,
ஞானவேல்ராஜா

என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.