கார் விபத்தில் சிக்கிய பொன்னியின் செல்வன் பாடகி ரக்ஷிதா சுரேஷ்...நடந்தது என்ன?- உயிர் தப்பிய திடுக்கிடும் நொடிகள் பற்றிய விவரம் உள்ளே!

கார் விபத்தில் சிக்கிய பொன்னியின் செல்வன் பாடகி ரக்ஷிதா சுரேஷ்,ponniyin selvan singer rakshitha suresh met with an accident in malaysia | Galatta

தென்னிந்திய சினிமாவில் பிரபல பாடகியாக வலம் வரும் ரக்ஷிதா சுரேஷ் இன்று மே 7ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கார் விபத்தில் சிக்கினார். மலேசியாவில் விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தபோது ரக்ஷிதா சுரேஷ் பயணத்து கொண்டிருந்த கார் காலையில் இருந்த டிவைடரில் மோதி விபத்துக்குள்ளானது. விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஜூனியர் - சீனியர் என இரண்டு சீசன்களிலும் கலந்து கொண்ட ரக்ஷிதா சுரேஷ் சூப்பர் சிங்கர் 6 நிகழ்ச்சியில் ரன்னர் அப்-ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னதாக ETV கன்னடா சேனலில் நடைபெற்ற லிட்டில் ஸ்டார் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரக்ஷிதா சுரேஷ் டைட்டில் வின்னர்-ஆக வெற்றி பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திரையுலகில் இசைஞானி  இசைஞானி இளையராஜாவின் இசையில் வெளிவந்த எவடே சுப்பிரமணியம் தெலுங்கு படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமான ரக்ஷிதா சுரேஷ் தொடர்ந்து சில தெலுங்கு, கன்னட பாடல்களை பாடி இருக்கிறார். தமிழில் ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையில் சிலம்பரசன்.TR கதாநாயகனாக நடித்த “வந்தா ராஜாவா தான் வருவேன்” படத்தின் மூலம் பாடகியாக களமிறங்கிய ரக்ஷிதா சுரேஷ் யூட்யூபில் ட்ரெண்டான “குட்டி பட்டாஸ்” பாடலையும் பாடியுள்ளார். பின்னர் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்களின் இசையில் பாலிவுட்டில் வெளிவந்த மீமி படத்தில் யானே யானே, மூப்பில்லா தமிழே தாயே (ஆல்பம் பாடல்) ஆகிய பாடல்களை பாடிய ரக்ஷிதா சுரேஷ் சிலம்பரசன்.TR நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான “வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தில் “காலத்துக்கும் நீ வேணும்” என்ற பாடலை இசைப்புயலுடன் இணைந்து பாடினார். தொடர்ந்து “பொன்னியின் செல்வன் பாகம் 1” படத்தில் “சொல்” என்ற பாடலை பாடிய ரக்ஷிதா சுரேஷ் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் “பொன்னியின் செல்வன் 2” படத்தில் இடம்பெற்ற “அக நக” பாடலின் கன்னட வெர்ஷனான "கிரு நகே" பாடலை பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் உலக முழுக்க தொடர்ந்து பல்வேறு நாடுகளில் நடைபெறும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் பல பிரம்மாண்டமான இசை கச்சேரிகளிலும் ரக்ஷிதா சுரேஷ் பாடி வருகிறார்.

இந்நிலையில் தற்போது கார் விபத்தில் சிக்கிய, பாடகி ரக்ஷிதா சுரேஷ் தனது சமூக வலைதள பக்கங்களில், “இன்று பெரிய விபத்தில் சிக்கினேன். இன்று காலை மலேசிய விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தபோது சாலையில் இருந்த டிவைடரில் பலமாக மோதிய கார் சாலையின் மறுபகுதிக்கு சென்றது. இந்தப் பெரிய பாதிப்பில் என் மொத்த வாழ்க்கையும் அந்த 10 வினாடிக்குள் என் கண் முன் தோன்றின. ஏர் பேக்குகளுக்கு நன்றிகளை தெரிவிக்கிறேன். இல்லையென்றால் நிலைமை மிகவும் மோசமாகி இருக்கும். இப்போதும் நடந்தது மிகவும் நடுக்கமாக இருக்கிறது. நானும், காரை இயக்கி வந்த டிரைவரும் உடன் பயணித்த இன்னொரு வரும் லேசான வெளி காயங்களோடும் சிறு உட்காயங்களோடும் பாதுகாப்பாக இருக்கிறோம் என நினைக்கும் போது கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறது.” என தெரிவித்துள்ளார். பாடகி ரக்ஷிதா சுரேஷின் அந்த பதிவு இதோ…
 

 

View this post on Instagram

A post shared by Rakshita Suresh (@rakshitasuresh)

தமிழ் நாட்டில் தி கேரளா ஸ்டோரி படத்தின் காட்சிகள் ரத்து... தொடர் போராட்டங்களின் எதிரொலியாக அதிரடி நடவடிக்கை!
சினிமா

தமிழ் நாட்டில் தி கேரளா ஸ்டோரி படத்தின் காட்சிகள் ரத்து... தொடர் போராட்டங்களின் எதிரொலியாக அதிரடி நடவடிக்கை!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் முக்கிய படத்தின் பாடல்களை வெளியிட்ட உலகநாயகன் கமல்ஹாசன்! ட்ரெண்டிங் புகைப்படங்கள் உள்ளே
சினிமா

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் முக்கிய படத்தின் பாடல்களை வெளியிட்ட உலகநாயகன் கமல்ஹாசன்! ட்ரெண்டிங் புகைப்படங்கள் உள்ளே

சினிமா

"பாலாவின் வணங்கான் படத்திலிருந்து வெளியேற காரணம் இதுதான்!"- முதல் முறை மனம் திறந்த க்ரீத்தி ஷெட்டி! வீடியோ இதோ