தளபதி விஜய் - கௌதம் மேனனின் யோஹன் அத்தியாயம் ஒன்று நடக்காததற்கான முக்கிய காரணம் இதுதான்! வைரலாகும் மனோஜ் பரமஹம்சாவின் பேட்டி இதோ

யோஹன் அத்தியாயம் ஒன்று நடக்காததற்கான காரணத்தை பகிர்ந்த மனோஜ் பரமஹம்சா,manoj paramahamsa about yohan movie thalapathy vijay gautham menon | Galatta

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளிவந்த தளபதி விஜயின் லியோ திரைப்படம் தற்போது மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. தொடர்ந்து அடுத்தடுத்து தளபதி விஜய் நடிக்கும் திரைப்படங்கள் இன்னும் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தளபதி விஜய் கதையின் நாயகனாக நடிப்பதாக அறிவிக்கப்பட்ட யோஹன் அத்தியாயம் ஒன்று திரைப்படம் பின்னர் பல்வேறு காரணங்களுக்காக கைவிடப்பட்டது.

இந்த நிலையில் லியோ திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் திரு.மனோஜ் பரமஹம்சா அவர்கள் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்தியேக பேட்டி கொடுத்த போது எக்கச்சக்கமான அசத்தலான விஷயங்களை நமக்காக பகிர்ந்து கொண்டார். மேலும் ரசிகர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருக்கும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் - தளபதி விஜய் கூட்டணியில் தயாராவதாக அறிவிக்கப்பட்டிருந்த யோஹன் அத்தியாயம் ஒன்று படம் குறித்தும் பேசினார். அப்படி பேசும்போது, நண்பன் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது தான் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் அவர்களைப் பற்றி, தளபதி விஜய் அவர்கள் கேட்டதாகவும் அதன் பிறகு தான் பேசி அவர்கள் இருவருக்குமான முதல் சந்திப்பை உருவாக்கிக் கொடுத்ததாகவும் தெரிவித்த மனோஜ் பரமஹம்சா அவர்கள் அதன் பிறகு யோகன் அத்தியாயம் ஒன்று படம் குறித்து தொடர்ந்து பேசிய போது,

“சென்னையில் இதற்காக ஒரு மீட்டிங் தயார் செய்து எல்லாம் நல்லபடியாக சென்றது கௌதம் சார் ஒரு லைன் சொன்னார் அது விஜய் சாருக்கும் பிடித்தது. அதை டெவலப் செய்யலாம் என முடிவு செய்து அடுத்த 4 - 5 மாதங்கள் பிறகு ஒரு நாள் நரேஷன் நடந்திருக்கிறது நான் அந்த சமயத்தில் பூவரசன் பீப்பி என்ற ஒரு படத்தின் படப்பிடிப்பிற்காக பொள்ளாச்சியில் இருந்தேன். அப்போது திடீரென விஜய் சாரிடம் இருந்து போன் வந்தது. “அண்ணா அவர் வந்து கதை சொன்னாரு மொத்த படத்திலும் ஒரு தமிழ் வசனம் கூட இல்லை முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே வசனங்களை எழுதி இருக்கிறார். வாய்ஸ் ஓவரில் மட்டும் தான் தமிழ் வருகிறது. ஆனால் அவர் சொல்லுகிற விஷயங்கள் எல்லாம் பயங்கரமாக இருக்கிறது. ஆனால் எனக்கு இது ரொம்ப கடினமாக இருக்கிறது. எனவே இதை புரிந்து கொண்டு அவர் கேட்பது போல் என்னால் பண்ண முடியுமா என்று தெரியவில்லை. பயமாக இருக்கிறது” என்றார் நான் திரும்ப கௌதம் சாரிடம், “சார் நான் அன்றே சொன்னேன் அவருக்கு பிடிக்கிற மாதிரி பண்ணுங்கள்” என்று கேட்டேன். “இல்லை நான் எழுத ஆரம்பித்து விட்டேன் ஒரு FLOWவில் இப்படி வந்து விட்டது இப்போது இதை நான் அவருக்காக மாற்ற முடியாது இது இப்படி தான் இருக்கும் இதை மாற்ற முடியாது நான் மீண்டும் அவருக்காக புதியதாக ஒன்று எழுதுகிறேன்” என்று சொன்னார். எனவே அப்போது அது கொஞ்சம் நடக்காமல் போனது” என தெரிவித்து இருக்கிறார். இன்னும் பல முக்கிய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்ட லியோ படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா அவர்களின் அந்த சிறப்பு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.