உடன்பிறப்பே பட அண்ணே யாரண்ணே அழகான பாடல் இதோ!!!
By Anand S | Galatta | October 07, 2021 17:28 PM IST
அனைத்து தரப்பு ரசிகர்களும் விரும்பும் சிறந்த கதாநாயகியாக மக்கள் மனதில் இடம் பிடித்திருப்பவர் நடிகை ஜோதிகா. 6 வருட இடைவெளிக்கு பிறகு நடிப்பில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய ஜோதிகா தொடர்ந்து கதாநாயகியை முன்னிறுத்தும் கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
அந்தவகையில் அடுத்ததாக நடிகை ஜோதிகாவின் நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் உடன்பிறப்பே. ஜோதிகாவுடன் இணைந்து சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க ஷிஜா ரோஸ், சூரி, கலையரசன், ஆடுகளம் நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவாகி இருக்கும் உடன்பிறப்பே திரைப்படம் நடிகை ஜோதிகாவின் 50வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. உடன்பிறப்பே திரைப்படத்தை இயக்குனர் இரா.சரவணன் எழுதி இயக்கியுள்ளார். டி.இமான் இசையில், R.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, ரூபன் படத்தொகுப்பு செய்துள்ளார்.
ஆயுத பூஜை வெளியீடாக வருகிற அக்டோபர் 14-ஆம் தேதி உடன்பிறப்பே திரைப்படம் நேரடியாக அமேசான் ப்ரைம் வீடியோவில் ரிலீசாகிறது. இந்நிலையில் இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ள உடன்பிறப்பே திரைப்படத்திலிருந்து முதல் பாடல் வெளியானது. பிரபல பாடகி ஸ்ரேயா கோல் பாடியுள்ள "அண்ணே யாரண்ணே" என்ற அழகான அந்தப் பாடலை கீழே உள்ள லிங்கில் கண்டு மகிழுங்கள்.