காதலிக்கலைனா கொன்னுருவேன் என்று  இளம் பெண்ணை மிரட்டிய இளைஞனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

தருமபுரியில் உள்ள கல்லூரியில் பி.எஸ்.சி முதலாமாண்டு படித்து வரும் கல்லூரி மாணவி ஒருவரை, தொப்பூர் அடுத்துள்ள ஜருகு பகுதியைச் சேர்ந்த 20 வயதான  பிரதாப், ஒரு தலையாகக் காதலித்து வந்துள்ளார்.

threatens girl love proposal

இது தொடர்பாக, அந்த மாணவி கல்லூரிக்கும் வரும்போதும், போகும்போதும் பின் தொடர்ந்து சென்று பல முறை காதல் டார்ச்சர் செய்துள்ளார். ஆனால், காதலை ஏற்க மறுத்த அந்த இளம் பெண், அந்த இளைஞனைப் பொருட்படுத்தவில்லை.

இந்நிலையில், இளம் பெண் தன்னை காதலிக்க வில்லை என்ற விரக்தியில், அந்த பெண்ணை பின் தொடர்ந்து சென்ற பிரதாப், தர்மபுரி குமாரசாமி பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே வந்து, மறைத்து வைத்திருந்த கத்தியைக் காட்டி, காதலிக்குமாறு அந்த பெண்ணை மிரட்டியதாகத் தெரிகிறது.

threatens girl love proposal

இதனால், பயந்துபோன மாணவி, வீடு திரும்பியதும், தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து, மாணவி அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் பிரதாப்பை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.