பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற கவின் முடிவு !
By Sakthi Priyan | Galatta | September 25, 2019 16:06 PM IST
பிக்பாஸ் வீட்டின் தொன்னூற்று நான்காம் நாளான இன்று வெளியான மூன்றாம் ப்ரோமோவில், ரூபாய் 5 லட்சம் தந்து வீட்டை விட்டு வெளியேற முன்வருபவர்கள் வரலாம் என்ற டாஸ்க்கை கூறியுள்ளார் பிக்பாஸ். இதற்கு கவின் தானாக முன் வந்து நிற்கிறார். இதனை கண்ட சாண்டி மற்றும் லாஸ்லியா கவினை தடுத்து வைத்துள்ளனர்.
நேற்று பிக்பாஸ் வீட்டின் மன்னராக முடிசூடப்பட்டார் தர்ஷன். மேலும் மஹத் மற்றும் யாஷிகா போன்றோரின் வருகை நேற்று காணப்பட்டது. கோல்டன் டிக்கெட்டை வென்று முகென் ராவ் மட்டும் இறுதிபோட்டிக்கு சென்றுள்ளார்.
வெறும் ப்ரோமோ மட்டுமா ? அல்லது நிஜமாகவே கவின் வெளியே செல்கிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.